கட்டட நுழைவாயிலை மறைத்த வெளிநாட்டு ஊழியர்கள்

1 mins read
753bbd3c-b339-4e98-88c4-32e13938e21b
-

தங்­க­ளுக்கு ஊதி­யம் வழங்­கப்­ப­ட­வில்லை என்று கூறி அங் மோ கியோ­வில் ஒரு கட்­ட­டத்­தின் நுழை­வா­யிலை நேற்று சில வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மறைத்­ததா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. அச்­சம்­ப­வம் பதி­வா­ன­தா­கக் கரு­தப்­படும் 18 வினா­டி­கள் நீடிக்­கும் காணொளி 'சிங்­கப்­பூர் இன்­சி­டன்ட்ஸ்' ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டது.

'ஷங்­காய் சோங் கீ' கட்­டு­மான நிறு­வ­னம், 'கட­னைத் திரும்­பத் தாருங்­கள்' உள்­ளிட்­டவை சீன மொழி­யில் எழு­தப்­பட்­டி­ருந்த தாள்­களை ஒன்­பது ஊழி­யர்­களில் ஐவர் வைத்­தி­ருந்­தது காணொ­ளி­யில் பதி­வா­னது. சிலர் காவல்­து­றை­யி­ன­ரி­டம் பேசிக்­கொண்­டி­ருந்த காட்சி­யும் காணொ­ளி­யில் இடம்­பெற்­றது.

'என்­சி­எஸ் ஹப்' நிறு­வ­னம் உள்ள 5 அங் மோ கியோ ஸ்தி­ரீட் 62க்கு வரு­மாறு நேற்று பிற்­ப­கல் 1.50 மணி­யளவில் அழைப்பு வந்­த­தா­கக் காவல்­துறை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தது.

யாரும் கைது­செய்­யப்­ப­ட­வில்லை. விசா­ரணை நடை­பெ­று­கிறது.