கவனமின்றி நடந்துகொண்டதால் பெண் காவல்துறை அதிகாரி ஒருவரின் மரணத்துக்குக் காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவர் வாகன விபத்து நிகழ்வதற்கு முன்பு இரு கோப்பைகள் அளவு மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது. எனினும், 'பிரெத்லைசர்' எனும் மது அருந்தியதை அடையாளம் காண்பதற்கான சோதனையில் அது தெரியவில்லை.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதியன்று 54 வயது அமெரிக்கரான ஆண்ட்ரூ சார்ல்ஸ் வாஸ்கோ கவனமின்றி தனது 'ஏஸ்டன் மார்ட்டின்' வாகனத்தை ஓட்டியதாகச் சொல்லப்படுகிறது. அன்றிரவு சுமார் 9.20 மணிக்கு அவரின் வாகனம், காவல்துறை அதிகாரியான 40 வயது ஸ்டாஃப் சார்ஜண்ட் சலினா முகம்மதை மோதியதாகக் கூறப்படுகிறது.
மூன்று பிள்ளைகளுக்குத் தாயான அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நான்கு நாள்களுக்குப் பிறகு மாண்டார்.

