தனது தந்தையைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 19 வயது இளையரிடம் மனநல சோதனை மேற்கொள்ள அவர் மூன்று வாரம் தடுத்துவைக்கப்படுவார்.
சைலஸ்நர் சியா ஜியே காய் இன்று நீதிமன்றத்தில் காணொளி இணைப்பின்வழி தோன்றினார். அவருடைய வழக்கு நவம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சியா, தனது தந்தையான 47 வயது எடி சியா வீ டெக்கை, ஈசூன் அவென்யூ 4ல் உள்ள புளோக் 653ன் 4வது மற்றும் 5வது மாடிகளுக்கிடையே கொலை செய்ததாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.