போதைப்பொருளை கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பத்தில் ஆறு சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளின் எண்ணமாக இருக்கிறது.
போதைப்பொருள் கடத்தலில் பொதுமக்களின் எண்ணங்களை அறிவதற்காக உள்துறை அமைச் சின்கீழ் கொள்கை ஆய்வுக் கழகம் ஆய்வு நடத்தியது.
இதில் பங்கேற்றவர்களில் 61.5 விழுக்காட்டினர், அதாவது பத்தில் ஆறு பேர், வேண்டுமென்றே குறிப்பிடத்தக்க அளவு போதைப் பொருளைக் கடத்திய குற்றவாளிகளுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டனர்.
2019ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2020ஆம் ஆண்டு ஜனவரி வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட 2,000 பேர் இதில் பங்கேற்றனர்.
ஆய்வில் 64.1 விழுக்காட்டினர், சிங்கப்பூருக்குள் குறிப்பிடத்தக்க அளவு போதைப்பொருளை வேண்டுமென்றே கடத்திக் கொண்டு வருபவர்கள் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.
போதைப்பொருளை கடத்து பவர்கள், சிங்கப்பூரில் பலரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களது வாழ்க்கையை நாசமாக்குவதே அதற்கு காரண மாக தெரிவிக்கப்பட்டது.
பல போதைப் புழங்கிகளின் குடும்பத்தையும் சீரழிப்பதால் போதைப்பொருள் கடத்திய குற்றவாளிகள் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள் என ஆய்வில் மொத்தம் 62.1 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
இதேபோன்ற மற்றொரு ஆய்வை உள்துறை அமைச்சின் ஆய்வு மற்றும் புள்ளியியல் பிரிவு நடத்தியது.
2021ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 65.6 விழுக்காட்டினர், குறிப்பிடத்தக்க அளவு போதைப்பொருளைக் கடத்தியவருக்கு மரண தண்டனை கட்டாயமாக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பதினைந்து வயதுக்கு மேற்பட்ட 2,000 பேர் ஆய்வில் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவித் திருந்தனர்.
இதேபோன்ற எண்ணத்தைக் கொண்ட பாதிக்கும் மேற்பட்டோர் (55%) போதைப்பொருள் கடத்தல் மோசமான குற்றச்செயல் என்றும் சமூகத்துக்கு ஆபத்தானது என்றும் கூறியிருந்தனர்.
ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 34.4 விழுக்காட்டினர் இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப் பதாகவும் கட்டாய மரண தண்டனையை ஏற்கவில்லை என்றும் கூறினர்.
இவர்களிடம் மேலும் ஆய்வு நடத்தப்பட்டு போதைப்பொருள் கடத்தலுக்கு என்ன தண்டனை விதிக்கப்படலாம், ஆயுள் தண்ட னையா, மரண தண்டனையா பொருத்தமான ஒன்றை தேர்ந் தெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டனர்.
அப்போது அவர்களில் 22.6 விழுக்காட்டினர் மரண தண்டனை விதிப்பதை நீதிமன்றத்திடம் விட்டுவிடலாம் என்றும் 61.6 விழுக்காட்டினர் ஆயுள் தண்டனையையும் தேர்ந்தெடுத்தனர். 15.8 விழுக்காட்டினர் தங்களுக்குத் தெரியவில்லை என்று தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையை விதிக்கலாம் என்றவர்களில் பெரும்பாலானவர்கள், அதாவது 67 விழுக்காடு பேர், மரண தண்டனை விதிக்க வேண்டு மா என்பதை அதிகாரிகள் முடிவு செய்யலாம் என்று கூறினர்.
ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறியவர்கள், குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அல்லது இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவதை தங்களுடைய வாய்ப் பாக தேர்ந்தெடுத்தனர்.
ஆய்வில் கொலைக் குற்றம், மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய கொடூரமான செயல் என்று பலரது பொதுவான கருத்தாக இருந்தது.
வேண்டுமென்றே கொலை செய்த குற்றவாளிகளுக்கு கட்டாய மரண தண்டனை பொருத்தமானது என்று கொள்கை ஆய்வு கழகத்தில் பங்கேற்றவர்களில் 71.4 விழுக் காட்டினரும் ஆய்வு மற்றும் புள்ளி யியல் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் 80.5 விழுக்காட்டினரும் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் உள்ளவர்களில் பத்தில் ஏழு பேருக்கு மேல் வேண்டு மென்றே செய்யப்பட்ட கொலை, துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது, போதைப்பொருள் கடத்தல் போன்ற மோசமான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை பயன்படுத்துவதை ஆதரித்துள்ளனர்.
சிங்கப்பூருக்கு வெளியே பத்து வட்டார மக்களில் எட்டுக்கும் மேற்பட்டோர், இத்தகைய மோசமான குற்றச் செயல்களை மரண தண்டனை தடுப்பதாகவும் கூறியுள்ளனர்.
உள்துறை அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூன்று ஆய்வுகள் இந்த விவரங்களைத் தெரிவிக்கின்றன. ஆய்வின் முடிவுகள் நேற்று அமைச்சின் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

