தீபாவளி வார இறுதி நீண்ட விடுமுறையில் உட்லண்ட்ஸ் அல்லது துவாஸ் சோதனைச் சாவடி வழியாக மலேசியா செல்ல விரும்பும் பயணிகள் கடுமையான நெரிசலை எதிர்பார்க்கலாம்.
இதன் தொடர்பில் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் இரு சோதனைச் சாவடி களிலும் உச்சநேர போக்குவரத்து கொவிட்-19க்கு முந்தைய நிலையை எட்டியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் "பயணிகள் தாமதத்தை எதிர்பார்க்க வேண்டியிருக்கும். அதற்கு ஏற்ப தங்களுடைய பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க வேண்டும்," என்று ஆணையம் அறிவுறுத்தியது.
"பயணிகள் பொறுமை காத்து புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
"சாலைத் தடங்களை முறையாக பின்பற்ற வேண்டும். சோதனைச் சாவடி ஆணையத்தின் தடங்களைப் பயன்படுத்தும்போது அங்கு பணியில் உள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்," என்றும் அது கேட்டுக் கொண்டது.
2019ஆம் ஆண்டின் தீபாவளி வாரயிறுதி நீண்ட விடுமுறையின் போது உச்சநேரத்தில் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட, இங்கு வந்த பயணிகள் குடிநுழைவுச் சோதனை களை முடிப்பதற்கு குறைந்தது இரண்டு மணி நேரம் காத்திருந்தனர்.
இதனால் இம்மாதம் 24ஆம் தேதி தீபாவளி அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் தாமதத்துக்கு தயாராக இருக்க வேண்டும். உச்சநேரத்தில் சிங்கப் பூரில் இருந்து புறப்படுவதையும் தவிர்க்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 11.59 வரை, சனிக்கிழமை காலை 6.00 முதல் பத்து வரை, மாலை ஆறு முதல் இரவு 11.59 வரை உச்ச நேரமாகும்.
அக்டோபர் 24ஆம் தேதி சிங்கப்பூர் வருவதற்கான உச்ச நேரம் மாலை 6 முதல் இரவு 11.59 மணி வரை இருக்கலாம் என்று ஆணையம் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளது.

