ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய விதிமுறை

ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய விதிமுறை

1 mins read
f2dfd153-474b-4e50-ba88-fec471c9564f
ஊழியர்களை மழையில் நனையாமல் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற புதிய விதிமுறை ஜனவரி 1 முதல் அமலாகிறது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ -

வாகனங்களில் கொண்டு செல்­லப்­படும் ஊழி­யர்­க­ளின் பாது­காப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக ஜன­வரி 1ஆம் தேதி­யி­லி­ருந்து புதுப்­புது விதிமுறை­கள் அம­லுக்கு வரு­கின்றன. வாக­னங்­களில் செல்­லும் ஊழி­யர்­கள் மழை­யில் நனை­யா­மல் இருக்­கும் வகை­யில் அவை மூடப்­பட்­டி­ருக்க வேண்­டும் என்­பது விதி­ மு­ை­றகளில் ஒன்று.

ஓட்­டு­ந­ரும் வேலை செய்­யும் ஊழி­ய­ராக இருந்­தால் மற்ற ஊழி­யர்­க­ளை­ தங்­கு­மி­டங்­க­ளுக்கு அனுப்­பு­வ­தற்கு முன்பு அவருக்கு குறைந்­தது அரை மணி நேரம் ஓய்வு வழங்­கப்­பட வேண்­டும்.

வேகக் கட்­டுப்­பா­டு­களை நிறுவ வேண்­டும் என்ற கடந்த மார்ச் அறி­விப்பு மட்டும், அது குறித்து காவல்­துறை ஆலோ­சனை நடப்­ப­தால் நிறுத்தி வைக்­கப்­ப­டு­தாக தெரி­விக்கப்­பட்­டுள்­ளது. நிலப் போக்கு வரத்து ஆணையம் உள்ளிட்ட அதி­கா­ரி­கள் இந்த விதி­மு­றை­களை நேற்று அறி­வித்­த­னர்.

கடந்த மார்ச் மாதம் போக்­கு­ வ­ரத்து மற்­றும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர், நாடா­ளு­மன்­றத்­தில் ஊழி­ய­ர்களின் பாது­காப்பு பற்றி பேசி­யி­ருந்­தார். அதற்கு விளக்­கம் அளிக்­கும் வகை­யில் அதி­காரிக­ளின் அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.