வாடகை மோசடி: மீண்டும் குற்றம் புரிந்தவருக்கு சிறை

வாடகை மோசடி: மீண்டும் குற்றம் புரிந்தவருக்கு சிறை

1 mins read
c427c53d-6457-4e67-b51e-bf076569d069
-

சிறை­யி­லி­ருந்து அக்­டோ­பர் 2020ல் விடு­த­லை­யான பின்­னர் பல­ரை­யும் ஏமாற்றி மொத்­தம் $87,700 பணத்­தைக் கையா­டிய 48 வயது சியேரா பெலுச்சி ஏஜே, 48, என்­ப­வ­ருக்கு மூவாண்­டுச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

தான் வாட­கைக்­குத் தங்கி இருந்த வீவக வீட்டைப் பிற­ருக்கு வாட­கைக்கு விடு­வ­தா­கக் கூறி, முன்­ப­ணம் வாங்­கி­யி­ருந்­தார் சியேரா. இருப்­பி­னும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக விதி­மு­றை­க­ளின்­படி வாட­கைக்கு இருப்­ப­வர், வீட்­டைப் பிற­ருக்கு உள்­வா­ட­கைக்கு விட அனு­மதி இல்லை.

சியேரா அக்­டோ­பர் 30, 2020 முதல் மார்ச் 19, 2021 வரை சட்­டத்­துக்­குப் புறம்­பான செயல்­களில் ஈடு­ப­டக்­கூ­டாது என்ற தண்­ட­னைக்­கால குறைப்பு ஆணை­யின்­கீழ் இருந்­த­போது வாடகை தொடர்­பான மோச­டிக் குற்­றங்­க­ளைப் புரிந்­த­தா­கக் கூறப்­பட்­டது. ஆணையை மீறிய குற்­றத்­துக்­காக சியேரா கூடு­த­லாக 37 நாட்­கள் சிறை­யில் இருக்­க­வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டது.

குறைந்த வரு­மா­னம் ஈட்­டு­வோருக்­குக் குறைந்த வாட­கை­யில் கிட்­டும் வகை­யில் வழங்­கப்­படும் வாடகை வீடு­களை, கூடு­தல் வரு­மா­னம் பெறு­வ­தற்­கெ­னப் பயன்­படுத்­தக்­கூ­டாது என்று மாவட்ட நீதி­பதி மார்­வின் பே தண்­டனை விதிப்­பின்­போது நினை­வூட்­டி­னார்.

ஆஸ்­தி­ரே­லிய நிரந்­த­ர­வாசி விசா பெறு­வ­தற்­கான சேவை­யை­யும் தான் வழங்­கு­வ­தா­கக் கூறி ஆட­வர் ஒரு­வரை சியேரா ஏமாற்றி உள்­ளார்.