சிங்கப்பூர் துறைமுகங்கள்: 85% ஆற்றல் அளவுக்குச் செயல்பாடு

சிங்கப்பூர் துறைமுகங்கள்: 85% ஆற்றல் அளவுக்குச் செயல்பாடு

1 mins read
2d7e0454-8e6b-45f6-bac8-27ccacaa6a86
-

சிங்­கப்­பூர் துறை­மு­கங்­கள் இப்­போது தங்­கள் மொத்த கூடி­ன­பட்ச கையா­ளும் ஆற்­ற­லில் சுமார் 85% அள­வுக்கு செயல்­ப­டு­கின்­றன.

இது, கப்­பல் நிறு­வ­னங்­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய குறு­கியகால தேவை அதி­க­ரிப்­பு­க­ளைப் பூர்த்தி செய்யப் போது­மா­னது என்று தெரிவிக்கப் பட்டது.

போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் நாடாளு­மன்­றத்­தில் இதனை தெரி­வித்­தார்.

துவாஸ் துறை­மு­கத்­தில் மேலும் அணை­க­ரை­கள் திறக்­கப்­ப­டும்­போது துறை­மு­கத்­தின் ஆற்­றல் கூடும் என்று கூறிய அவர், சென்ற ஆண்­டில் சிங்­கப்­பூர் சாதனை அள­வாக 20 அடி நீள 37.5 மில்­லி­யன் கொள்­க­லன்­களைக் கையாண்டு இருக்­கிறது என்­றார்.

பீஷான்-தோ பாயோ உறுப்­பி­ன­ரான சக்­தி­யாண்டி சுப்­பாட்­டிற்கு பதி­ல­ளித்­துப் பேசிய அமைச்­சர், சிங்­கப்­பூ­ரின் இப்­போ­தைய கூடி­ன­பட்ச சரக்கு கையா­ளும் ஆற்­றல் அளவு ஆண்டு ஒன்­றுக்கு 44 மில்­லி­யன் கொள்­க­லன்­கள் என்றும் கூறினார்.