4 மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளை கத்தியால் தாக்கிய ஆடவர் கைது 

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனையில் அதிகாரிகளை தாக்கிய குற்றத்திற்காக 26 வயது சந்தேக நபர், சோ டெக் எர்ன், கைதி செய்யப்பட்டார்.

சோ போதைப் பொருள் எடுத்ததாக தங்களுக்கு கிடைத்த தகவலின்படி மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சி என் பி) புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பு இல்லத்தை வியாழக்கிழமை காலை 5 மணி அளவில் சோதனை செய்தது என்று காவல் துறையினரும் சிஎன்பியும் வியாழக்கிழமை அன்று கூறியது.

சோ 15 சென்டிமீட்டர் அளவுகொண்ட கத்தியை ஏந்தியபடி சரணடைய மறுத்தார். இந்த நடவடிக்கையின் போது, நான்கு அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டபோதும், அதிகாரிகள் சோவை அடக்கி கைதுச் செய்தனர்.

தாக்கப்பட்டவர்களில் மூன்று அதிகாரிகளுக்கு கைகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது. நான்காவது அதிகாரி, மூத்த ஸ்டாஃப் சார்ஜண்ட் ஜகன் கணசேகரன், பின்புறத்தில் வெட்டப்பட்டு, தெளிவற்ற நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சட்டத்தை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். இதை போன்ற தாக்குதல்களை உள்துறை குழு சகித்துக்கொள்ளாது என்று காவல் துறையும் சி என் பியும் தெரிவித்தது.

கத்தி, பல வகை போதை பொருள்கள் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன.

சோவ் மனநல மருத்துவமனையில் மனநிலை சோதனைக்காக தடுத்துவைக்கப்படுவார்.

இந்த வழக்கு நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!