துணைப் பிரதமர் வோங்: உதவிகள் தொடரும்

துணைப் பிரதமர் வோங்: உதவிகள் தொடரும்

2 mins read
3ea9cca6-a4b4-43c2-9632-7b2341103927
-

மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்க மின்னிலக்கமயமாதலில் கவனம் செலுத்தும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உத்தரவாதம்

உல­க­ளா­விய நிலை­யில் ஏற்­பட்­டுள்ள மனி­த­வ­ளப் பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்­கும் நோக்­கில் செயல்­மு­றை­க­ளைத் தானி­யக்க மய­மாக்கி, உற்­பத்­தித்திறனை அதி­க­ரிக்­கத் திட்­ட­மி­டும் நிறு­வ­னங்­க­ளுக்கு அர­சாங்­கத்­தின் மானி­யங்­களும் வழி­காட்­டு­த­லும் தொடர்ந்து கிடைக்­கும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் கூறி­யி­ருக்­கி­றார்.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் அனைத்­து­லக வாய்ப்­பு­க­ளைப் பெற­வும் உல­க­ளா­விய சவால்­க­ளைச் சமா­ளிக்­க­வும் கூடு­தல் உதவி வழங்­கப்­படும் என்று அவர் உறு­தி­ய­ளித்­தார்.

சிங்­கப்­பூர் மலாய் வர்த்­தக, தொழிற்­ச­பை­யின் விருந்து, விரு­த­ளிப்பு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு அவர் உரை­யாற்­றி­னார். கடந்த ஆண்­டில் சிறப்­பா­கச் செயல்­பட்ட மலாய் வர்த்­தக நிறு­வ­னங்­க­ளுக்கு இந்­நி­கழ்ச்­சி­யில் விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

நிதி­ய­மைச்­ச­ரு­மான திரு வோங் தமது உரை­யில், கொவிட்-19 கிரு­மிப்­ ப­ர­வ­லின் மோச­மான கால­கட்­டம் முடி­வுற்­ற­போ­தி­லும், உல­கம் புதிய சவால்­க­ளைச் சந்­தித்­துக் கொண்­டி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

நாடு­க­ளுக்கு இடை­யி­லான அர­சி­யல் பதற்­றம், அதி­க­ரிக்­கும் வட்டி விகி­தங்­கள், ரஷ்­யா­வுக்­கும் உக்­ரே­னுக்­கும் இடை­யி­லான போர், அதன் விளை­வாக உல­கெங்­கும் எரி­பொ­ருள், உணவு ஆகி­ய­வற்­றின் விநி­யோ­கம் தடை­பட்­ட­தால் ஏற்­பட்ட பண­வீக்­கம் ஆகி­ய­வற்றை அவர் சுட்­டி­னார்.

இத்­த­கைய சவால்­க­ளுக்கு இடை­யி­லும் சிங்­கப்­பூ­ருக்­கும் இந்த வட்­டா­ரத்­திற்­கும் வளர்ச்­சிக்­கான வாய்ப்­பு­கள் தொடர்ந்து கிடைப்­ப­தா­கத் துணை பிர­த­மர் கூறி­னார்.

சிங்­கப்­பூர்ப் பொரு­ளி­யல் இந்த ஆண்டு மூன்று விழுக்­காடு முதல் நான்கு விழுக்­காடுவரை விரி­வ­டை­யும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டி­ருப்­ப­தைச் சுட்­டிக்­காட்­டிய திரு வோங், தென்­கி­ழக்­கா­சி­யா­வின் பொரு­ளி­யல் வளர்ச்­சி­யும் நன்­றாக இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரின் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் வளர்ச்சி வாய்ப்­பு­களைச் சிறப்­பா­கப் பயன்­ப­டுத்­திக் கொள்­வ­தற்­குக் கூடு­தல் உதவி வழங்­கப்­படும் என்­றார் அவர்.

இத்­த­கைய நிறு­வ­னங்­க­ளுக்கு மின்­னி­லக்கமய­மா­தல் தொடர்ந்து கைகொ­டுப்­ப­தா­கக் கூறிய துணைப் பிர­த­மர், அது நிறு­வ­னங்­க­ளின் செயல்­தி­றனை மேம்­ப­டுத்­து­வ­தோடு அதி­க­மான வாடிக்­கை­யா­ளர்­க­ளைச் சென்­ற­டை­ய­வும் உத­வு­வ­தா­கக் கூறி­னார்.

வர்த்­த­கச் செயல்­பா­டு­களை மின்­னி­லக்­கப் படுத்­தி­யுள்ள சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் கூடு­தல் வரு­வாய் ஈட்­டி­ய­தாக ஆய்­வு­கள் தெரி­விப்­ப­தாக அவர் சொன்­னார்.

மலாய், முஸ்­லிம் வர்த்­த­கங்­க­ளுக்கு உத­வு­வ­தில் அர­சாங்­கத்­தோடு தொடர்ந்து செயல்­ப­டு­மாறு சிங்­கப்­பூர் மலாய் வர்­த்தக, தொழிற்­ச­பை­யைத் திரு வோங் கேட்­டுக்­கொண்­டார்.

கடந்த ஆண்­டு­களில் தொழிற்­சபை­யின் இத்­த­கைய முயற்­சி­களைப் பாராட்­டிய துணைப் பிர­த­மர், ஒற்­று­மை­யு­டன் செயல்­பட்­டால் சவால்­க­ளைச் சமா­ளித்து வலி­மை­யு­டன் மீண்டு வர­லா­மென்று தாம் நம்­பு­வ­தா­கக் கூறி­னார்.