போதைப்பொருள் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் 117 பேர் கைது

போதைப்பொருள் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் 117 பேர் கைது

1 mins read
b9c44974-7ff4-42f9-9df1-2a89fe93875f
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா இருப்பதாக நம்பப்படும் மிட்டாய்கள் (இடது), கஞ்சா செடிகள் எனக் கருதப்படுபம் செடிகள். படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு -

போதைப்­பொ­ருள் குற்­றங்­க­ளைப் புரிந்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் மொத்­தம் 117 பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

சென்ற மாதம் 10ஆம் தேதிக்­கும் 21ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் மத்­திய போதைப்­பொருள் ஒழிப்­புப் பிரிவு தீவெங்­கும் நடத்­திய சோத­னை­யில் அவர்­கள் பிடி­பட்­ட­னர். சுமார் 19,000 வெள்ளி மதிப்­புள்ள போதைப்­பொ­ருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

கஞ்சா சேர்க்­கப்­பட்­ட­தாக நம்­பப்­படும் மிட்­டாய்­களை குடி­நு­ழைவு, சோத­னைச் சாவ­டி­ ஆணை­யம் 'பார்­சல் போஸ்ட் ஸ்டே­ஷன்' அஞ்­சல் நிலை­யத்­தில் கண்­டு­பி­டித்­த­னர். இளை­யர்­களை ஈர்ப்­ப­தற்­காக கஞ்சா போன்­றவை மிட்­டாய்­கள் உள்­ளிட்டவற்றில் சேர்க்­கப்­பட்டு அவை சாதா­ரண உணவு வகை­களாக விற்­கப்­ப­டு­வ­தாக மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு நேற்று தெரி­வித்­தது. சுகாதாரப் பொருள்களாக விற்கப்படும் சில பொருள்களிலும் கஞ்சா சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் அது குறிப்பிட்டது.