அதிகாரிகளைக் கத்தியால் தாக்கியதாக சந்தேகிக்கப்படுபவர் கைது

அதிகாரிகளைக் கத்தியால் தாக்கியதாக சந்தேகிக்கப்படுபவர் கைது

1 mins read
3fe5aa95-3363-46dd-88e0-192810799738
-

நான்கு மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­க­ளைத் தாக்­கி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் ஓர் ஆட­வர் கைது­செய்­யப்­பட்டுள்ளார். சந்­தேக நப­ரான 26 வயது சோ டெக் எர்ன் மீது நேற்று குற்­றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

வேண்­டு­மென்றே அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்­குக் காயம் விளை­வித்­த­தன் தொடர்­பில் அவர் மீது நான்கு குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டன. புக்­கிட் பாஞ்­சாங் வட்­டா­ரத்­தில் பெட்­டிர் சாலை­யில் இருக்­கும் ஓர் அடுக்­கு­மாடி வீட்­டில் நேற்று முன்­தி­னம் அதி­காலை ஐந்து மணி­ய­ள­வில் சோ குற்­றம் புரிந்­ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஒருவர் போதைப்­பொ­ருள் உட்­கொண்­ட­தா­கத் தக­வல் கிடைத்­த­தைத் தொடர்ந்து சோதனை நடத்­தப்­பட்­ட­தாக காவல்­து­றை­யும் மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வும் தெரி­வித்­தன. அப்­போது சோ, மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்பு அதி­கா­ரி­க­ளைத் தாக்­கி­ய­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

அப்­போது நான்கு அதி­கா­ரி­களுக்கு உடலின் சில பகுதிகளில் வெட்­டுக் காயங்­கள் ஏற்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.