தடைசெய்யப்பட்ட புகையிலை, சிகரெட்டுகள் தொடர்பில் அறுவர் மீது குற்றச்சாட்டுகள்

தடைசெய்யப்பட்ட புகையிலை, சிகரெட்டுகள் தொடர்பில் அறுவர் மீது குற்றச்சாட்டுகள்

1 mins read
d23d8cd7-9127-4658-86d9-46870a6dcb0d
-

தடை­செய்­யப்­பட்ட புகை­யி­லைப் பொருள்­கள், சிக­ரெட்­டு­கள் ஆகி­யவை சம்­பந்­தப்­பட்ட குற்­றங்­கள் தொடர்­பில் அறு­வர் மீது குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. 33 வயது சியூ சூன் லூங், 35 வயது முகம்­மது நூர் அமாலி ஹல்மி, 29 வயது ஸ்டீ­வன் நிக் கேப்­ரி­யல், 30 வயது விஜ­யன் சர்­க­ரன், 31 வயது மோகன் ராஜ் அகி­லன், 43 வயது சோங் வான் சியோங் ஆகி­யோர் அந்த அறு­வர்.

தடை­செய்­யப்­பட்ட புகை­யி­லைப் பொருள்­கள் போன்ற திரு­டப்­பட்ட பொருள்­களை சட்­ட­வி­ரோ­த­மா­கப் பெற்­ற­தாக அவர்­கள் சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­ற­னர். அர­சாங்க ஊழி­யர் ஒரு­வர் அத்­த­கைய பொருள்­களை சட்­ட­வி­ரோ­த­மா­கக் கைமாற்­றி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. நீதிமன்ற ஆவணங்களில் அந்த அர­சாங்க ஊழி­ய­ரின் அடை­யா­ளம் வெளி­யிடப்­ப­ட­வில்லை.

நம்­பிக்கை மோசடி, போலி ஆவ­ணங்­க­ளைத் தயார்ப்படுத்தியது உள்­ளிட்­ட­வற்­றின் தொடர்­பில் அந்த அறு­வர் மீது நேற்று குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன. சந்­தேக நபர்­கள் அனை­வ­ரும் மலே­சி­யாவைச் சேர்ந்தவர்கள்.