கடல்நீரைக் கண்காணித்துக் காக்க புதிய ஏற்பாடு

கடல்நீரைக் கண்காணித்துக் காக்க புதிய ஏற்பாடு

2 mins read
255c3ef9-1b57-4df1-aaa4-a8df8efe7b16
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வெப்பமண்டல கடல் அறிவியல் பயிலகத்தின் மூத்த ஆய்வாளரான டாக்டர் ஜானி டான்ஸில், கடல் சுற்றுப்புற உணர்வுக் கட்டமைப்பு பற்றி விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் கடல்­நீ­ரைப் பாது­காக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களைக் குறித்த நேரத்­தில் எடுக்க ஏது­வாக 2025ஆம் ஆண்டு வாக்கில் கடற்­கரை ஓரம் மூன்று மித­வை­கள் அமைக்­கப்­படும்.

அவற்­றில் உணர்­கருவிகள் இருக்­கும். நச்­சுத்­தன்­மை­யு­டன் கூடிய பாசி­கள் பெரு­கு­வ­தை­யும் பவ­ளப்­பா­றை­கள் அழுகி வீணா­வதை­யும் அந்த உணர்­கருவிகள் முன்­ன­தா­கவே கண்­டு­பி­டிக்கும்.

இத­னால் குறித்த காலத்­தில் நட­வ­டிக்­கை­களை எடுத்து கடல்­நீ­ரைப் பாது­காக்க முடி­யும்.

அந்த மித­வை­க­ளுக்கு 'கடல் சுற்­றுச்­சூ­ழல் உணர்வுக் கட்­ட­மைப்பு' என்று பெயர். அவை சிங்­கப்­பூர் நீரிணை கடல்­நீ­ரைப் பற்­றிய தக­வல்­களைத் தெரி­விக்­கும் ஆற்­றலு­டன் கூடி­யவை.

கடல்­நீ­ரில் தாது­வ­ளம் எந்த அள­வுக்கு இருக்­கிறது, கடல்­நீ­ரின் உப்­புத்­தன்மை முத­லான பல­வற்­றை­யும் அந்த உணர்­கருவிகள் கண்­டு­பிடித்து தெரி­யப்­ப­டுத்­தும்.

கடல்­நீரில் ஏற்­படும் மாற்­றங்­களை அறி­வி­யல் வல்­லு­நர்­கள் கண்­டு­பி­டிக்க அந்­தத் தக­வல்­கள் மிக­வும் உத­வும் என்று செயின்ட் ஜான்ஸ் தீவின் தேசிய கடல்­துறை ஆய்­வுக்கூடத்­தின் துணை இயக்கு­நர் டாக்­டர் ஜானி டான்­ஸில் தெரி­வித்­தார்.

எடுத்­துக்­காட்­டாக, பாசி­கள் சில நாள்­க­ளி­லேயே மண்­டி­வி­டும். அதனால் உயிர்க்காற்று வளம் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­படும். இதன் கார­ண­மாக மீன் போன்ற கடல்­வாழ் உயி­ரி­னங்­கள் சர­ச­ர­வென மாண்டு­வி­டும் என அவர் விளக்­கி­னார்.

கடல்­நீர் வெப்­பம் கூடு­வதும் அமி­லச் சத்து அதி­க­ரிப்­ப­தும் நீண்­ட­கா­லப் போக்­கில் கடல்­வாழ் உயி­ரி­னங்­க­ளுக்­குப் பாதிப்பை ஏற்­படுத்­தி­விட முடி­யும்.

தண்­ணீர்த் தரத்­தில் ஏற்­ப­டக்­கூடிய மாற்­றங்­களை வைத்து இத்­த­கைய பாதிப்புகளைக் கண்­டு­பிடித்து­வி­ட­லாம்.

மூன்று மித­வை­களில் பொருத்­தப்­பட்டு இருக்­கும் உணர்­கருவிகள் மூலம் கிடைக்­கக்­கூ­டிய தக­வல்­கள், வட்­டார, உலக அள­வி­லும் புள்­ளி­வி­வ­ரங்­களை கொடுத்து உத­வும்.

செயின்ட் ஜான்ஸ் தீவில் நேற்று நடந்த கடல்­துறை அறி­வி­யல் ஆய்வு உரு­வாக்கப் பொது வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் அந்­தக் கட்­ட­மைப்பு பற்றி அறி­விக்­கப்­பட்­டது.

கடல்­துறை அறி­வி­யல் ஆய்வு தொடங்­கப்­பட்டு 20 ஆண்­டு­கள் ஆவ­தைக் குறிக்­கும் வகை­யில் நடந்த அந்த நிகழ்ச்­சி­யில் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.