தெம்பனிஸ் வீட்டில் தாயும் மகனும் இறந்து கிடந்தனர்

1 mins read
1e757326-1212-4004-9f4b-7f54b0e6055f
இருவரின் உடல்கள் அந்த வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப் படுகின்றன. படம்: ஷின்மின் -

தெம்­ப­னி­சில் உள்ள அடுக்­கு­மாடி வீடு ஒன்­றில் 70 வயது ஆட­வ­ரும் அவ­ரது 92 வயது தாயா­ரும் சனிக்­கி­ழமை காலை இறந்து கிடக்க காணப்­பட்­ட­னர். சம்­ப­வம் குறித்து தங்­க­ளுக்கு அன்று காலை 11.56 மணிக்கு அழைப்பு வந்­தது என்று காவல்­துறை கூறி­யது.

தெம்­ப­னிஸ் ஸ்தி­ரீட் 22, புளோக் 285ன் 11வது மாடி­யில் உள்ள வீட்­டுக்­குச் சென்ற காவல்­துறை அதி­கா­ரி­கள் அங்கு இரு­வ­ரது அசை­வற்ற உடல்­க­ளைக் கண்­ட­னர். அவர்­கள் இரு­வ­ரின் மர­ணம் சம்­பவ இடத்­தி­லேயே துணை மருத்­துவ அதி­கா­ரி­க­ளால் உறுதி செய்­யப்­பட்­டது.

அந்த வீட்­டி­லி­ருந்து துர்­நாற்­றம் வீசி­யது என்று அண்டை வீட்­டார் ஷின்­மின் நாளி­த­ழி­டம் கூறி­னர்.

அந்த புளோக்­கின் 10வது மாடி­யில் வசிக்­கும் குடி­யி­ருப்­பா­ளர் கடந்த ஒரு வார­மா­கவே அந்த துர்­நாற்­றம் வீசி­ய­தா­க­வும் அது மற்ற குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் சமையல் காரணமாக இருக்கலாம் என்று தான் நினைத்­த­தா­கக் கூறி­னார்.

ஆரம்பகட்ட விசாரணையில் அந்த மரணங்களில் சூது ஏதும் இல்லை என்று தெரியவந்தது என்றும் விசாரணை தொடர்கிறது என்றும் காவல்துறை கூறியது.