2050ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் ஹைட்ரஜன் வாயு மூலம் 50% மின்சாரம்

2050ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் ஹைட்ரஜன் வாயு மூலம் 50% மின்சாரம்

1 mins read
56196673-6d41-449d-8155-b8cb4c8f05b2
-

கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தில் சம­நிலை எட்­டும் சிங்­கப்­பூ­ரின் முயற்­சி­யில் ஹைட்­ர­ஜன் வாயு முக்­கி­யப் பங்கு வகிக்­கும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

2050ஆம் ஆண்­டிற்­குள் நாட்­டின் மின்­சா­ரத் தேவை­யில் கிட்­டத்­தட்டை பாதியை குறை­வான கரி­ய­மில ஹைட்­ர­ஜன் வாயு­வி­லி­ருந்து பெற இய­லும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் கூறி­யுள்ளார்.

ஹைட்­ர­ஜன் வாயுவை எரி­பொ­ரு­ளா­கப் பயன்­ப­டுத்­தும்­போது அதி­லி­ருந்து மிகக் குறைந்த அளவே கரி­ய­மில வாயு வெளி­யே­றும். அண்­மைய ஆண்­டு­களில் இதில் முத­லீடு செய்­யும் போக்கு அதி­க­ரித்­தி­ருப்­ப­தை­யும் அர­சாங்­கக் கொள்­கை­கள் இதற்கு ஆத­ரவு தரு­வ­தை­யும் திரு வோங் தமது உரை­யில் சுட்­டி­னார்.

கடல்­துறை, விமா­னப் போக்­கு­வரத்து ஆகி­ய­வற்­றில் குறை­வான கரி­ய­மில எரி­பொ­ரு­ளைத் தயா­ரிக்­க­வும் ஹைட்­ர­ஜன் வாயு பயன்­படும் என்­றார் அவர்.

உள்­நாட்டு விநி­யோ­கம் மட்­டு­மன்றி ஆசி­யா­வுக்­கான ஹைட்­ர­ஜன் விநி­யோ­கச் சங்­கி­லியை உரு­வாக்­க­வும் விரை­வில் ஹைட்­ர­ஜன் தொழில்­நுட்­பங்­களை சிங்­கப்­பூர் சோதித்­துப் பார்க்­கும் என்­றார் துணைப் பிர­த­மர். தொடர்ந்து ஹைட்­ர­ஜன் தொழில்­நுட்­பங்­களை மேம்­ப­டுத்­து­வது தொடர்­பான ஆய்வு, மேம்­பாட்­டுப் பணி­களில் கவ­னம் செலுத்­தப்­படும் என்­றா­ர் அவர்.