மனநலக் குறைபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வடக்கு-தெற்கு ரயில் பாதையில் செல்லும் எம்ஆர்டி ரயில்களின் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளன.
'பியோன் தி லேபல்' (பிடிஎல்) எனும் திட்டத்தின்கீழ் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ரயில்களின் உட்புறத்தில் உள்ள தரையிலும் பக்கவாட்டிலும் திட்டத்தின் சின்னமான 'பிரேவ்' ஆங்காங்கே இடம்பெறுகிறது.
மனநலக் குறைபாடு கொண்டோரின் அனுபவங்கள், குணமடையும் படலம், பள்ளியில், வீட்டில், வேலையிடத்தில் நண்பர்களும் குடும்பத்தாரும் அவர்களுக்கு வழங்கும் ஆதரவு ஆகியவை பற்றிய குறிப்புகள் இதில் இடம்பெறு
கின்றன.
மனநலக் குறைபாடு கொண்டவர்களுடன் எவ்வாறு பேசுவது, அவர்களுக்கு எவ்வாறு ஆதரவு வழங்குவது என்பது குறித்து பொதுமக்களுக்குக் கற்பிக்கும் நோக்கில் ரயிலின் உட்பறத்தில் உரைநடையுடனான படங்கள் உள்ளன.
பிடிஎல் இயக்கம், தேசிய சமூக சேவை மன்றம், டச் சமூக சேவைகள் அமைப்பு ஆகியவற்றால் 'கோ பியோன்' எனும் கருப்பொருளுடனான பிடிஎல் ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனநலக் குறைபாடு தொடர்
பாகச் சமுதாயத்தில் நிலவும் தவறான புரிதலைக் களையவும் பாதிக்கப்பட்டோருக்குப் பொது
மக்களிடமிருந்து கூடுதல் ஆதரவைத் திரட்டவும் இந்தத் திட்டம் இலக்கு கொண்டுள்ளது. மனநலக் குறைபாடு குறித்த தவறான புரிதல் சமுதாயத்தில் தொடர்ந்து பரவலாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. சுய கட்டுப்பாடு, மன உறுதி இல்லாததால் மனநலக் குறைபாடு ஏற்படுவதாக நான்கில் ஒருவருக்குத் தவறான புரிதல் இருப்பதாக தேசிய சமூக சேவை மன்றம் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

