ஹோட்டல் தொழில்துறை ஊழியர்களின் திறன்களை வளர்க்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹோட்டல் தொழில்துறை உருமாற்றத் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. திட்டத்தின்கீழ் நான்கு உத்தி கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஹோட்டல் தொழில்துறை ஊழியர்களின் தற்போதைய பணிகள் அதிக மதிப்புள்ள பதவிகளாக உருமாற்றப்படுவது அவற்றில் அடங்கும். புதுப்பிக்கப்பட்ட ஹோட்டல் அணுகுமுறையால் விருந்தினர்
களின் தேவைகளைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது, முக்கிய கொள்கையாக நீடித்த நிலைத்
தன்மையைக் கொண்டிருப்பது, சோதித்து உறுதி செய்யப்பட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாடுகளை அதிகரிப்பது ஆகியவை மற்ற மூன்று உத்திகளாகும்.
விருந்தோம்பல் துறையில் சேரும் உள்ளூர் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க
பள்ளிகளுடன் சிங்கப்பூர் பயணத்
துறைக் கழகம் தனது தொடர்புகளை வலுப்படுத்தும்.
அதே வேளையில், ஹோட்டல்களில் பணிபுரியும் உள்ளூர் ஊழியர்கள் பதவி உயர்வு பெற அவர்களுக்கு உதவும் வகையில் நடப்பில் உள்ள ஆதரவுத் திட்டங்களை ஹோட்டல்கள் பயன்படுத்தலாம்.
ஹோட்டல் தொழில்துறை உருமாற்றுத் திட்டம் 2025ஐ உணவு, பானங்கள், கூட்டணி ஊழியர்கள் சங்கம், சிங்கப்பூர் ஹோட்டல் சங்கம், ஹோட்டல் தொழில்துறை, அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் மேம்படுத்தியது. இதற்கு எதிர்காலப் பொருளியல் மன்றம் இவ்வாண்டு தொடக்கத்தில் அங்கீகாரம் வழங்கியது.
முதல் ஹோட்டல் தொழில்துறை உருமாற்றத் திட்டம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஹோட்டல் தொழில்துறை மேம்பட்டுள்ளதாக வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்தார்.
"வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது சிங்கப்பூரின் சுற்றுப்பயணத்துறை வருவாயில் 20 விழுக்காட்டுக்கும் அதிகமான வருமானம் உள்ளூர் ஹோட்டல் தொழில்துறையின் பங்களிப்பாகும். கொவிட்-19 நெருக்கடிநிலை தலைதூக்கியதற்கு முன்பாக, அதாவது 2019ஆம் ஆண்டில் உள்ளூர் ஹோட்டல் தொழில்துறையில் 400 நிறுவனங்கள் இருந்தன.
"உள்ளூர் ஹோட்டல் தொழில்துறையில் 34,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்தனர். 2015ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சராசரி உற்பத்தித்திறன் அடிப்படையில் மற்ற ஆசிய நாடு
களின் ஹோட்டல் தொழில்துறை
களைவிட சிங்கப்பூரின் ஹோட்டல் தொழில்துறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டது," என்று சிங்கப்பூர் எக்ஸ்போவில் உள்ள ஃபுட் அண்ட் ஹோட்டல் ஏஷியா-ஹோட்டல், உணவகம், கெஃபேயில் நடைபெற்ற அனைத்துலக வர்த்தக நிகழ்ச்சியின் திறப்பு விழாவில் திரு டான் தெரிவித்தார்.
2029ஆம் ஆண்டில் முன் இல்லாத அளவில் சிங்கப்பூர் ஹோட்டல்களில் சராசரியாக 87 விழுக்காட்டு அறைகள் நிரம்பின. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரை சிங்கப்பூர் ஊழியரணியின் ஹோட்டல் நிபுணர்களுக்கான வாழ்நாள்தொழில் மாற்றுத் திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 60 ஹோட்டல்
களைச் சேர்ந்த 1,400க்கும் அதிகமான ஊழியர்கள் பலனடைந்தனர். இவ்வாண்டு இறுதிக்குள் சிங்கப்பூருக்கு நான்கு மில்லியனிலிருந்து ஆறு மில்லியன் அனைத்துலகப் பயணிகள் வருவர் என்று முன்னுரைக்கப்பட்டது.
இதில் சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆறு மில்லியனாகப் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.
சுற்றுப்பயணிகள் மூலம் சிங்கப்பூருக்கு இவ்வாண்டு இறுதிக்குள் $10 பில்லியனுக்கும் $12 பில்லியனுக்கு இடைப்பட்ட வருவாய் கிடைக்கும் என்று நம்பப்
படுகிறது.

