பி கியூ. 1 , பி கியூ. 1.1 கொவிட்-19 திரிபுகளை தொற்றிய 4 நபர்கள் அக்டோபர் 23ஆம் தேதியில் கண்டறியப்பட்டுள்ளன.
நாள்வரில் யாரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு செவ்வாயன்று, நோய் தொற்றவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதைக் குறிப்பிடாமல் கூறியது.
ஓமிக்ரான் திரிபுகள் முதன்முதலில் ஜூலை நைஜீரியாவில் கண்டறியப்பட்டது. இதுவரை ஐம்பது நாடுகளில் இந்த திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த திரிபுகளின் தொற்று எண்ணிக்கை அண்மையில் அதிகரித்துள்ளன.
புதிய திரிபுகளின் தாக்கத்தை கண்காணித்து வருகிறது அமைச்சு. நோய் குறித்த மேல் விவரங்கள் விரைவில் அளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது