உட்லண்ட்ஸ் பாலம் வழியாக ஜோகூர் பாரு செல்லும் வாகனமோட்டிகளின் பயண நேரம் அதிகரிக்கக்கூடும்.
ஜோகூர் பாருவின் சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தில் செயல்படும் சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்தல் சாவடியில் (சிஐகியூ) கார்கள் நுழைவதற்கான டி-பகுதி, புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருப்பது இதற்குக் காரணம்.
சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் நேற்று ஃபேஸ்புக்கில் இந்தத் தகவலை வெளியிட்டது. சிஐகியூவின் மற்ற பகுதிகள் தொடர்ந்து செயல்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.
புதுப்பிப்புப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்த தகவல் ஏதுமில்லை.
புதுப்பிப்புப் பணிகள் நடைபெறும் காலத்தில் சோதனைச்சாவடியின் ஏ, பி, சி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சேவை வழங்கும் என்பதை ஜோகூர் குடிநுழைவுத் துறை அதன் ஃபேஸ்புக் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளது. பயணிகள் இரண்டாவது பாலத்தைப் பயன்படுத்தலாம் என்று இரு ஆணையங்களும் நினைவுபடுத்தியுள்ளன.

