சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வலுவடைந்து வந்தாலும் இன்றைய சிக்கல் நிறைந்த காலகட்டத்தில் அந்த உறவைத் தக்கவைத்துக்கொள்வது அவசியம் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறினார்.
மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா, அவரின் மனைவி அஸிஸா அமினா மைமுனா இஸ்கந்தரியா, அரச குடும்பத்தினர், மூத்த அதிகாரிகள் ஆகியோருக்காக இஸ்தானாவில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் அதிபர் இவ்வாறு கூறினார். நம்பிக்கை, புரிந்துணர்வு, மக்கள் பலனடைதல் ஆகியவற்றை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது தங்களின் கடமை என்று இரு தலைவர்களும் உறுதிபடக் கூறினர்.

