மூன்று வகையான அரிசிகளுக்கு 15 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று தீவு முழுவதும் பேரங்காடிகளை நடத்தும் ஃபேர்பிரைஸ் அறிவித்துள்ளது.
இதனால் வழக்கமான விலையைவிட மூன்று வகை அரிசியை குறைவான விலைக்கு வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
இச்சலுகை நவம்பர் 9ஆம் தேதி வரை நீடிக்கும் என்று ஃபேர்பிரைஸ் தெரிவித்துள்ளது.
சோங்ஹி ஏஏஏ தாய் ஹோம் மாலி ஐந்து கிலோ அரிசிப் பை, ஃபேர்பிரைஸ் தாய் பிரவுன் பட்டை தீட்டப்படாத ஐந்து கிலோ அரிசிப் பை அல்லது டபிள் ஃபேர்பிரைஸ் தாய் ஹோம் மாலி பிரிமியம் குவாலிட்டி ஃபிராகிரண்ட் பத்து கிலோ பை ஆகியவற்றில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் நான்கு அரிச பைகள் வரை சலுகை விலையில் வாங்க முடியும்.
சோங்ஹி ஐந்து கிலோ அரிசிப் பையின் வழக்கமான விலை $16.90. ஆனால் சலுகை விலையில் அது $14.35க்கு விற்கப்படும்.
ஃபேர்பிரைஸ் ஐந்து கிலோ பிரவுன் அரசியின் விலை கழிவுக்குப் பிறகு $9.50ஆக இருக்கும்.
இது, வழக்கமான $11.20 விலையிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது.
டபிள் ஃபேர்பிரைஸ் 10 கிலோ அரிசிப் பை $23.65 விலைக்குப் பதிலாக $19.90க்கு விற்கப்படும்.
நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அன்றாடத் தேவைகளில் பணவீக்கத்தின் தாக்கத்தை குறைக்கும் முயற்சியாக இந்த மூன்று வகை அரிசியின் விலை 2020ஆம் ஆண்டிலிருந்து மாறவில்லை என்று ஃபேர்பிரைஸ் குறிப்பிட்டது.
ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகியான விபுல் சாவ்லா, சிங்கப்பூர் குடும்பங்களுக்கு அரிசி ஒரு முக்கிய அடிப்படைத் தேவையாகும் என்றார்.
கடந்த மாதம் பணவீக்கம் 5.3 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. உணவு, சேவை, சில்லறை, இதர பொருட்களின் விலை அதிகரித்த தே இதற்கு காரணம் என்று தெரி விக்கப்பட்டது.

