'கரிம வெளியேற்ற இலக்குக்கு போதுமான ஆர்வமில்லை'

'கரிம வெளியேற்ற இலக்குக்கு போதுமான ஆர்வமில்லை'

2 mins read
685f3eca-f796-4cd1-a5c6-ed1557944600
-

கரிம கழி­வற்ற நிலையை அடைய கூடு­தல் முனைப்­புக் காட்ட வேண்­டும் என்று அர­சாங்­கம் இணை­யம் மூலம் மேற்­கொண்ட ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

இதில் ஆய்­வில் பங்­கேற்ற மூவ­ரில் இரு­வர் கரிம கழி­வற்ற நிலையை அடைய 2050ஆம் ஆண்டு இலக்கு வைத்­துள்­ளது, இந்­தப் பிரச்­சி­னை­யில் போது­மான ஆர்­வத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தாக இல்லை என்று கூறி­யுள்­ள­னர்.

தேசிய பரு­வ­நிலை மாற்ற செய­ல­கம் இணை­யம் வழி மேற்­கொண்ட ஆய்­வில் இந்த முடி­வு­கள் தெரிய வந்­துள்­ளன.

அர­சாங்­கத்­தின் 'ரீச்' எனப்­படும் கருத்து சேக­ரிப்­புப் பிரிவு செப்­டம்­பர் 5ஆம் தேதி­யி­லி­ருந்து 26ஆம் தேதி­வரை இந்த ஆய்வை மேற்­கொண்­டது. இது அர­சாங்­கம் இந்த வாரம் தனது ஆகக் கடைசி பரு­வ­நிலை இலக்­கு­களை அறி­விக்­கும் முன்­னர் நடத்தப் பட்டது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அர­சாங்­கம், சிங்­கப்­பூர் கரிம கழி­வற்ற நிலையை 2050ஆம் ஆண்­டுக்­குள் அடைய இலக்கு கொண்­டுள்­ள­தாக செவ்­வாய்க்­ கி­ழமை அறி­வித்­தது. இந்­நி­லை­யில், கரிம வாயு வெளி­யேற்­றக் கொள்­கையை அது கடு­மைா­யாக்கியுள்ளது என்­றும் அதன்­படி, 2030ஆம் ஆண்­டுக்­குள் கரிம கழிவு 60 மில்­லி­யன் டன்னாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப் ­ப­டு­வ­தாக துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார். இதற்கு முன்­னர் 2030ஆம் ஆண்­டுக்­குள் கரிம கழிவு 65 மில்­லி­யன் டன் என்ற இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஐக்­கிய நாடு­கள் சபை பாரிஸ் பரு­வ­நிலை ஒப்­பந்­தத்­தின் கீழ் சிங்­கப்­பூர் தேசிய அள­வில் தனது பங்கை செலுத்துவதற்காக இந்த இலக்­கு­களை நிர்­ண­யித்­துள்­ளது. இந்த மேம்­ப­டுத்­தப்­பட்ட இலக்­கு­க­ளின் மூலம் சிங்­கப்­பூர் கரிம கழி­வற்ற நிலையை சீக்­கி­ரமே அடைய தாங்கள் சில­வற்றை விட்­டுக்­கொ­டுப்­ப­து­டன் சில அசௌ­க­ரி­யங்­க­ளை­யும் ஏற்கத் தயா­ராக இருப்­ப­தாக ஆய்­வில் பங்­கேற்ற 94 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­துள்­ள­னர். ஆய்­வில் பொது­மக்­கள், வர்த்­தக மற்­றும் அரசு சாரா அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்து 490 கருத்­து­கள் சேக­ரிக்­கப்­பட்­ட­தாக கூறப் ­ப­டு­கிறது.

இதில் பெரும்­பா­லா­னோர், அதா­வது 65 விழுக்­காட்­டி­னர், 20லிருந்து 39 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள்.