'சுய ஆதிபத்தியமுள்ள குடிமகனுக்கு' நீதிமன்ற வழக்கை எதிர்நோக்க தகுதியுண்டு

'சுய ஆதிபத்தியமுள்ள குடிமகனுக்கு' நீதிமன்ற வழக்கை எதிர்நோக்க தகுதியுண்டு

1 mins read
a105d45c-7255-4a13-ba69-147d9d5a4722
-

கொவிட் -19 பர­வல் சூழ­லில், முகக்­க­வ­சம் அணி­யத் தவ­றி­ய­ தாகக் கூறப்­படும் "சுய ஆதிபத்தியம் உள்ள குடி­ம­கன்" என்று தன்­னைத் தானே அறி­வித்­துக் கொண்­ட­வர், நீதி­மன்­றத்­தில் வாதி­டு­வ­தற்கு தகு­தி­யா­ன­வர் என்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

மன­ந­லக் கழ­கத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட மன­ந­லப் பரி­சோ­த­னை­யில், 57 வய­தான அப்­துல் ரஷித் அப்­துல் ரஹ்­மான் நீதி­மன்­றத்­தில் தனது வாதத்தை முன்­வைக்­க­வும் வழக்­கைத் தொடர்ந்து கவ­னிக்­க­வும் தகு­தி­யா­ன­வர் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அப்­துல் ரஷித் நேற்று மாவட்ட நீதி­மன்­றத்­தில் நிறுத்­தப்­பட்­டார். அவ­ருக்கு எதி­ரான வழக்கு நவம்­பர் 30 ஆம் தேதி ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. கொவிட்-19 தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள் சட்­டத்­தின்­கீழ் அப்­துல் ரஷீத் மீது இரண்டு குற்­றங்­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

அப்­துல் ரஷீத் கிரு­மிப் ­ப­ர­வல் கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்­த­போது முகக்­க­வ­சம் அணிய மறுத்த பிரிட்­டிஷ் குடி­ம­கன் பெஞ்­ச­மின் கிளின்­னின் வழக்­க­றி­ஞர் என்று கூறிக்­கொண்டு நீதி­மன்­றத்­தில் தோன்­றி­னார்.

அவர் பிலிப்­பினா ஹசி­யெண்டா அர­சின் வழக்­க­றி­ஞ­ராக பணிப்­பு­ரி­வ­தாக கூறிக்­கொண்­டார். ஆனால், தமக்கு வழக்­க­றி­ஞர் உரி­மம் இல்லை என்­பதை அவர் ஒப்­புக்­கொண்­டுள்­ளார்.