காலாங்பாய லேபார் விரைவுச்
சாலையில் நேற்று முன்தினம் விபத்து நிகழ்ந்தது. இதில்
ஒன்பது வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.
விபத்தில் எட்டு கார்களும் ஒரு வேனும் சிக்கின. தெம்பனிஸ் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் பாதையில் பார்ட்லி ரோடு ஈஸ்ட் நுழைவாயிலை அடுத்து விபத்து நிகழ்ந்தது.
விபத்து குறித்து மாலை 4.45 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
விபத்துக்குள்ளான கார்களில் ஒன்றின் ஓட்டுநரான 40 வயது பெண்ணும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரும் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான இரண்டு கார்களின் ஓட்டுநர்களும் வேன் ஓட்டுநரும் விசாரணையில் உதவி வருகின்றனர்.
விபத்துக்குள்ளான வாகனங்
களைக் காட்டும் காணொளி நேற்று சிங்கப்பூர் 'சிங்கப்பூர் ரோட் எக்ஸிடெண்ட்' ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
விரைவுச்சாலையின் இடது பக்கத்திலிருந்து இரண்டாவது தடத்தில் அந்த வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்று இருந்ததை அந்தக் காணொளி காட்டியது.
இதற்கிடையே, காலாங்பாய லேபார் விரைவுச்சாலையிலிருந்து நிக்கல் ஹைவேக்கு வெளியேறும் இடத்தில் சென்றுகொண்டிருந்த லாரியிலிருந்து கனமான பல உலோகத் தகடுகள் விழுந்த
தாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதி ஏழு மணி நேரத்துக்கு மூடப்பட்டது. லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

