தனியாக வேலை செய்ய விரும்பு
பவர்களுக்கும் நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்ய விழைபவர்களுக்கும் மார்சிலிங் எம்ஆர்டி நிலையத்தில் புதிதாக இடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
புதிய உள்ளூர் நிறுவனமான ஸ்டேஷன் இவ்விடத்தைக் கட்டியது. இவ்விடத்தை தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று பிற்பகல் அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
புதிய இடத்தில் 30 பேர் அமர்ந்து வேலை செய்யத் தேவையான
வசதிகள் உள்ளன.
இதுவே ஸ்டேஷன் நிறுவனத்தின் முதல் வாழ்வியல் தொடர்பான இடமாகும்.
ஸ்டேஷன் நிறுவனம் திறந்துவைத்துள்ள வசதிகளைப் பயன்
படுத்த விரும்புவோர் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
குறைந்தபட்ச விலை, ஒரு மணி நேரத்துக்கு $4.90. இந்தத் தொகையைச் செலுத்திவிட்டு அங்கிருக்கும் ஒரு மேசையைப் பயன்
படுத்திக்கொள்ளலாம்.
இணையம் மூலம் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.
ஒருநாள் முழுவதுக்குமான கட்டணத்தின் விலை $29 ஆகும். ஒரு நாள் கட்டணம் செலுத்துவோர் அங்கு வழங்கப்படும் பானங்களை எவ்வளவு வேண்டுமானாலும் அருந்தலாம்.
$299 கட்டணம் செலுத்தி மாதாந்திரப் பயன்பாட்டு அட்டையையும் பெற்றுக்கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாது, மணிக்கு $39 செலுத்தி கலந்துரையாடல் அறைகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
தனியாக அமர்ந்து வேலை செய்ய விரும்புவோருக்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட சிறு அறை
களுக்கான ஒருநாள் கட்டணம் $59. அடுத்த ஆண்டு உட்லண்ட்ஸ், பாய லேபார் ஆகிய வட்டாரங்களிலும் இதுபோன்ற இடங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீட்டில் வேலை செய்ய சரியான சூழல் இல்லாவிடில் வீட்டிற்கு அருகிலேயே இத்தகைய இடங்களை அமைத்துத் தர ஸ்டேஷன் நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது.

