இன்று சிறப்பு கவிமாலை

1 mins read
14f24c6d-efbb-4391-a116-e3970b236ef1
-

கவி­மா­லை­யின் 269ஆவது மாதச் சந்­திப்பு நிகழ்ச்சி இன்று சனிக்­கி­ழமை மாலை 6 மணிக்கு தேசிய நூல­கம், தளம் 5, அறை­யில் நடக்­கிறது.

இம்­மா­தக் கவி­மா­லை­யில் தீபா­வளி சிறப்பு நிகழ்ச்­சி­யாக பாரம்­பரிய உடை அணிந்து தொடக்­கப்­பள்ளி மாண­வர்­கள் படைக்­கும் கவிதை நிகழ்ச்சி இடம்பெறும்.

கவி­மாலை கவி­ஞர்­கள் மு சே பிர­காஷ், வெற்­றி­செல்­வன், மாரி­முத்து சர­வ­ண­கு­மார், இராம.நாச்­சி­யப்­பன், லலி­தா­சுந்­தர், பிர­பா­தேவி, வெண்­ணிலா, ரத்­தி­னாம்­பிகை, சங்­கீதா ஆகி­யோர் பங்­கேற்­கும் தீபா­வளி மேடை கவிதை போட்­டி­யும் அரங்­கே­றும் என்று கவி­மாலை தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள கவிஞர்கள், கவிதை ஆர்­வ­லர்­க­ளு­டன் ஒவ்­வொரு மாத­மும் கடைசி சனிக்­கி­ழமை மாதாந்­தி­ரச் சந்­திப்­பினை கவி­மாலை நடத்தி வரு­கிறது.