கடத்தல் நாடக மோசடி: இருவரும் கம்போடியாவில்

கடத்தல் நாடக மோசடி: இருவரும் கம்போடியாவில்

1 mins read
eab860e9-19f5-4eac-816c-8dff517a2720
-

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் இரண்டு பேர் மோச­டிக்­கா­ரர்­க­ளின் தனித்­தனி­யான கடத்­தல் நாட­கத்­தில் சிக்­கி­விட்­ட­னர்.

அந்த இரு­வ­ரும் அக்­டோ­பர் மாதம் கம்­போ­டி­யா­வில் காணப்­பட்­ட­னர். சிங்­கப்­பூர், கம்­போ­டியா காவல்­து­றை­யி­னர் கூட்­டாக நடத்­திய புலன்­வி­சா­ரணை மூலம் இந்த வெற்றி கிடைத்து இருக்­கிறது என்று காவல்­துறை தெரி­வித்­தது.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் படிக்­கும் அந்த இரு­வ­ருக்­கும் வயது 21 மற்­றும் 22. அந்த இரு­வ­ரும் கடத்­தப்­பட்­ட­தாக சீனா­வில் இருக்­கும் அவர்­க­ளின் பெற்­றோர்­கள் தெரி­வித்­த­னர்.

கம்­போ­டிய தேசிய காவல்­துறை உத­வி­யு­டன் அந்த இரு­வரும் நோம்­பென் நக­ரில் கண்டு­பி­டிக்­கப்­பட்டு அவர்­க­ளின் குடும்­பத்­தா­ரு­டன் சேர்ந்­த­னர். புலன்­வி­சா­ரணை தொடர்­வ­தாக காவல்­துறை தெரி­வித்­தது.