சிங்கப்பூரில் வசிக்கும் இரண்டு பேர் மோசடிக்காரர்களின் தனித்தனியான கடத்தல் நாடகத்தில் சிக்கிவிட்டனர்.
அந்த இருவரும் அக்டோபர் மாதம் கம்போடியாவில் காணப்பட்டனர். சிங்கப்பூர், கம்போடியா காவல்துறையினர் கூட்டாக நடத்திய புலன்விசாரணை மூலம் இந்த வெற்றி கிடைத்து இருக்கிறது என்று காவல்துறை தெரிவித்தது.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் அந்த இருவருக்கும் வயது 21 மற்றும் 22. அந்த இருவரும் கடத்தப்பட்டதாக சீனாவில் இருக்கும் அவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
கம்போடிய தேசிய காவல்துறை உதவியுடன் அந்த இருவரும் நோம்பென் நகரில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தாருடன் சேர்ந்தனர். புலன்விசாரணை தொடர்வதாக காவல்துறை தெரிவித்தது.

