முரசொலி மருத்துவமனைகளின் ஆயத்தமும் பொதுமக்களின் பொறுப்பும்

முரசொலி மருத்துவமனைகளின் ஆயத்தமும் பொதுமக்களின் பொறுப்பும்

4 mins read
4e17942c-16d2-4e6e-9c0e-1962c6a34956
-

சிங்­கப்­பூ­ரில் பொது மருத்­து­வ­ம­னை­களின் அவ­சர சிகிச்சைப் பிரிவுகளில் பல ஆண்டுகளாகவே கூட்டம் அதி­க­மாக இருந்து வரு­வ­தா­கத் தெரி­கிறது.

தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மம், தேசிய பல்­க­லைக்­க­ழக சுகா­தா­ரத்­துறை, சிங்ஹெல்த் ஆகிய மூன்று சுகா­தா­ரப் பர­ாம­ரிப்­புக் குழு­மங்­களும் அண்மை­யில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்­டன.

இந்த ஆண்டுத் தொடக்­கத்­தில் இருந்து கடந்த பத்து மாத கால­மா­கவே தங்­கள் மருத்­து­வ­மனை களின் அவ­சர சிகிச்­சைப் பிரி­வுகளில் கூட்­டம் மிக அதி­க­மாக இருந்து வரு­வ­தாக அந்­தக் கூட்­ட­றிக்கை தெரி­வித்­தது. இப்­போது கொவிட்-19 தொற்று அதி­க­மாகி இருக்­கிறது. இதனால் நிலைமை இன்னும் கடினமாகி உள்­ளது. சூழ்­நி­லையை மிக அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தாக மருத்­து­வ­ம­னை­கள் தெரி­வித்­துள்­ளன.

கொவிட்-19 நோயா­ளி­க­ளை­யும் இதர நோயாளி களை­யும் கையாள சூழ்­நி­லைக்கு ஏற்ப அவை தங்­க­ளைச் சரிசெய்துகொண்டு வரு­கி­ன்­றன.

கொரோனா தொற்று அறி­கு­றி­கள் தெரி­ய­வந்­துள்ள நிலை­யில் பரி­சோ­தனை முடி­வு­க­ளுக்­காக சிலர் காத்து இருக்­கக்­கூ­டும். அவர்­களை மனத்தில் கொண்டு படுக்­கை­களை மருத்­து­வ­ம­னை­கள் ஒதுக்கி தயா­ராக வைத்து இருக்­கின்­றன. இதர வச­தி­களை­யும் அவை ஆயத்­தப்­ப­டுத்தி உள்­ளன.

கிருமி தொற்­றி­யும் உடல்­நிலை சீராக இருக்­கும் நோயா­ளி­கள், வீட்­டில் இருந்­த­ப­டியே குண­ம­டை­யும் செயல்­திட்­டத்­தின்கீழ் வைக்­கப்­ப­டு­கி­றார்­கள். அவர்களுக்­குத் தொலை­வில் இருந்­த­படி ஆலோசனை­கள், இதர உத­வி­கள், ஆத­ரவு அளிக்­கப்­ப­டு­கிறது.

அல்­லது கொவிட்-19 சிகிச்சை நிலை­யம் போன்ற பொருத்­த­மான நிலை­யங்­க­ளுக்கு அத்­தகைய நோயாளி­கள் அனுப்­ப­ப்படு­கி­றார்­கள்.

உடனே செய்­ய­வேண்­டிய அவ­ச­ரம் அவ­சி­யம் அல்­லாத அறுவை சிகிக்­சை­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்டு, அத்­த­கைய நிலையை எதிர்­நோக்குவோருக்குத் தொலை­வில் இருந்­த­படி ஆலோ­சனை வழங்­கு­வது, அவர்­க­ளைக் கண்­கா­ணிப்­பது, மருந்­து­களை அனுப்பி வைத்து உத­வு­வது போன்­ற­வற்­றை­யும் மருத்­து­வ­மனை­கள் செய்து வரு­கின்­றன.

நோயா­ளிக­ளின் தேவை­களை நிறை­வேற்றும் அதே­வே­ளை­யில், பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளிள் சுமையை­யும் மருத்­து­வ­ம­னை­கள் கவ­னத்­தில் கொள்­ள­வேண்டி இருக்­கிறது. இத்­த­கைய சூழ­லை எதிர்நோக்கினாலும் மருத்­து­வ­மனைகள் தங்­க­ளால் இயன்ற அள­வுக்கு வெகு சிறப்­பான சேவையை அளித்­து­வ­ரு­கின்­றன.

சிங்­கப்­பூரர்­கள் சுகா­தா­ரம், மருத்­து­வ­மனை சேவை ­கள் என்று வரும்­போது மருத்துவமனைகளில் சூழல் எப்­படி இருந்­தாலும் எதை­யுமே விட்­டுக்கொடுக்க மாட்­டார்­கள். உயர்தரத்­தையே அவர்­கள் விரும்­பு­வார்­கள் என்­ப­தை­யும் எப்­போ­துமே கவ­னத்­தில் கொண்டு அவை செயல்­ப­டு­கின்­றன.

கொரானா தொற்று அதி­க­ரித்­து வருவதால் ஏற்­கெ­னவே அதிக சுமையை எதிர்­நோக்­கும் மருத்து­வ­மனை­க­ளுக்கு மேலும் நெருக்கடி எற்­பட்­டுள்­ளது.

மருத்­து­வ­மனைகளின் அவ­சர சிகிச்சைப் பிரிவு­களில் நோயா­ளி­கள் கூட்டமும் அவர்களை மருத்­து­வமனை ஊழி­யர்­கள் கையா­ள­வேண்­டிய நிலையும் இருக்­கும் என்­ப­து இயல்­பு­தான்.

ஆனால் தொற்று தொடர்ந்து இருந்­து­வ­ரும் ஒரு நிலை­யில் இப்படிப்பட்ட சூழல் தலை­காட்­டி­னால் பிரச்சினை இன்­னும் அதி­க­ரிக்­கவே செய்­யும்.

இத்தகைய ஒரு நிலையைத்தான் பொது மருத்துவ மனைகள் இப்போது எதிர்நோக்கி வருகின்றன.

இந்­தப் பிரச்­சினை சிரமமான ஒரு நிலையை உரு­வாக்­கும் அள­வுக்­குப் பெரி­தாகி இருக்­கிறது.

பல பொது மருத்­து­வ­ம­னை­களில் படுக்­கை­கள் இல்லை என்­ப­தால் மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு வரும் மருத்­துவ வாக­னங்­களில் இருந்து நோயா­ளி­க­ளைக் கீழே இறக்கி அவர்­களை உட­ன­டி­யாக மருத்­து­வ­மனை­யில் சேர்க்க இயலவில்லை. நோயா­ளி­கள் அந்த வாக­னங்­களி­லேயே 30 நிமி­டம்­ வ­ரைகூட காத்­தி­ருக்க வேண்­டிய நிலை உள்­ளது.

அவசர சிகிச்சைப் பிரி­வு­கள் பல­வற்­றில் நோயாளி கள் தேங்கி இருக்­கும் சூழ­லும் உள்­ளது. காரணம் அவர்­களை வேறு இடங்­க­ளுக்கு மாற்றலாம் என்றால் அதற்­கான அறை­களும் இல்லை.

பொது மருத்­து­வ­ம­னை­களில் அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­களில் கூட்­டம் என்­பது பல ஆண்­டு­க­ளா­கவே இருந்­து­வ­ரும் ஒன்­று­தான்.

ஆனால் அந்­தப் பிரச்­சினை இந்த ஆண்­டில் மோச­மாகி இருக்­கிறது. இதற்கு கொரோனா தொற்று கூடி இருப்­ப­தும் ஒரு கார­ணம் என்று அவ­சர சிகிச்­சை பிரி­வு­க­ளைச் சேர்ந்த மருத்­து­வர்­களும் தாதி­யர்­களும் அண்­மை­யில் செய்­தித்­தாள் பேட்­டி­யில் தெரி­வித்து இருந்­தார்­கள்.

இந்­தச் சூழ­லில் நோயா­ளி­க­ளைப் பரா­ம­ரிக்க போதிய வளங்­களும் ஊழி­யர்­களும் இருப்­பதை மருத்­து­வ­ம­னை­கள் உறு­திப்­ப­டுத்த வேண்­டும். இதை சுகா­தார அமைச்சுடன் சேர்ந்து செய்துவரு­வ­தாக பொது­ ம­ருத்­து­வ­ம­னை­கள் அறி­வித்துள்ளன.

இதில் பொதுமக்களும் மருத்­து­வ­ம­னைகளுக்கு உதவ முடி­யும். இது இப்­போது மிக­வும் அவ­சி­ய­மா­ன­தாக, தேவை­யா­ன­தாக ஆகி இருக்­கிறது.

மருத்­து­வ­ம­னை­களில் செயல்­படும் அவ­சர சிசிச்சைப் பிரி­வு­கள் என்­பவை சுகா­தா­ரப் பராமரிப்பு முறை முழு­வ­தற்­குமே மிக­வும் உயிர்­நா­டி­யா­னவை என்­பதை மக்கள் உண­ர­வேண்­டும்.

இந்­தப் பிரி­வு­களில் நோயா­ளி­கள் குவிந்துவரும் சூழ­லில், அவ­சர சிகிச்சை தேவைப்­படாதவர்­களும் அதி­க­மாக வரு­கி­றார்­கள் என்­பதுதான் சிரமமான தாகவும் கவலையாகவும் இருக்­கிறது.

உடல்­நிலை மிக­வும் மோச­மாக இருந்­தா­லொ­ழிய மக்­கள் அவ­ச­ர­ சி­கிச்சைப் பிரிவை நாடக்­கூ­டாது. இதை அவர்­கள் நன்கு புரிந்­து­கொள்ள வேண்­டும்.

சாதா­ரண சிறு­சிறு உடல்­ந­லப் பிரச்­சி­னை­களைத் தலை­சி­றந்த முறை­யில் கவ­னித்து அவற்­றுக்குச் சிகிச்சை அளிக்­கும் அரு­மை­யான வளங்­கள் தேவைக்கு அதி­க­மா­கவே தனி­யார் மருந்தகங்களிலும் பல­துறை மருந்­த­கங்­க­ளிலும் இருக்­கின்­றன என்­பதை அவர்­கள் கவ­னத்­தில் கொள்ளவேண்­டும்.

தேவை­யில்­லா­மல் பொது மருத்­து­வ­ம­னை­க­ளின் அவ­ச­ர­ சி­கிச்சை பிரி­வுக்கு மக்­கள் செல்­வ­தால் ஏற்­ப­டக்­கூ­டிய தேவையற்ற சிரமங்கள் ஏராளம் என்பது குறிப்­பி­டத்­தக்­கது. உட­ன­டி­யாக கவ­னித்து அவ­ச­ர­ சி­கிச்­சையைப் போதிய அள­வுக்கு உடனே அளிக்க வேண்­டிய தேவை­யுள்ள நோயா­ளி­கள் இருப்­பார்­கள். அவர்­களை மருத்­து­வர்­களும் தாதி­யர்­களும் உரிய நேரத்­தில் கவ­னித்து உரிய சிகிச்சை­களை அளித்­தாக வேண்­டும்.

தேவை­யில்­லா­மல் அத்­த­கைய பிரி­வு­களில் சிகிச்சை பெற பொது­மக்­கள் சென்­றால் அவற்றின் பொன்­னான நேரமும் வளங்­களும் வீணா­கும். இதைக் கருத்­தில்­கொண்டு புரிந்துணர்வுவுடன் மக்கள் செயல்­பட்­டால் பொது மருத்­து­வ­மனை­களின் சுமை பேரளவிற்குக் குறையும்.