அங் மோ கியோவில் 1,000 மரக்கன்றுகள்; இலக்கு நிறைவு

அங் மோ கியோவில் 1,000 மரக்கன்றுகள்; இலக்கு நிறைவு

1 mins read
68c78916-0d9a-4ca0-8927-1a5d9863bdf8
நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங் சுவரோவியத்தின் ஓர் அங்கமாக பொருத்தப்பட்டிருந்த எம்ஆர்டி இருக்கையில் அமர்ந்து தன்னை படம் எடுத்துக்கொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அங் மோ கியோ­வில் 1,000 மரக்­கன்­று­களை நட­வேண்­டும் என்ற சமூ­கத் திட்ட இலக்கு நேற்று நிறை­வே­றி­யது.

அங் மோ கியோ அவென்யூ 10ல் இருக்­கும் செங் சான் சந்தை, உண­வங்­காடி நிலை­யத்­திற்கு அருகே கடைசி­யாக 16 மரக்­கன்­று­கள் நேற்று நடப்­பட்டன.

அங் மோ கியோ நகர மன்­றம் நடத்­திய மரம் நடும் நாளை­யொட்டி பிர­த­மர் லீ சியன் லூங் உள்­ளிட்ட பிர­மு­கர்­கள் மரக்­கன்­று­களை அங்கு நட்­ட­னர்.

மழை இலே­சாக தூறினா­லும் ஏரா­ள­மான குடி­யி­ருப்­பா­ளர்­கள் மரம் நடும் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­தாகத் தெரிவிக்கப்பட்டது.

அங் மோ கியோ­வில் கடந்த ஏழு மாத­மாக இடம்­பெற்று வந்த மரம் நடும் இயக்­கம் இப்­போது முடி­வ­டைந்து இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் 10 ஆண்­டு­களில் ஒரு மில்­லி­யன் மரக்­கன்­று­களை நட வேண்­டும் என்­பது தேசிய இலக்கு. அதற்கு ஆத­ர­வாக அங் மோ கியோ­வில் 1,000 மரக்­கன்று­கள் நடப்­பட்டு இருக்­கின்­றன.

மரக்­கன்­று­களை நட்­ட பிறகு பிர­த­மர், அங்கு ஒரு புளோக்கின் தரைத்தளத்தில் எம்­ஆர்டி ரயில் பெட்டி போன்று வரை­யப்­பட்டு இருந்த சுவ­ரோ­வி­யத்­தைப் பார்­வை­யிட்­டார். அந்­தச் சுவ­ரோ­வி­யம் இடம்­பெற்ற சுவ­ரில் பழைய ரயில் பெட்டி இருக்­கை­கள் பொருத்­தப்­பட்டு இருந்­தன.

நிகழ்ச்­சி­யில் அங் மோ கியோ பள்ளி மாண­வர்­கள் பல்­வேறு சுற்­றுச்­சூ­ழல் திட்­டங்­கள் பற்றி குடி­யி­ருப்­பா­ளர்­க­ளு­டன் தங்­கள் கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­னர்.