8,000 மரக்கன்றுகளுடன் புலாவ் உபினில் பூங்கா

8,000 மரக்கன்றுகளுடன் புலாவ் உபினில் பூங்கா

1 mins read
dd3b9f8c-773b-4049-85e8-8ea25a21d51f
-

புலாவ் உபி­னில் கைவி­டப்­பட்ட வளர்ப்பு தாவர குட்­டை­களில் 8,000 சதுப்புநில மரக்­கன்­று­களை நடு­வ­தற்­கான திட்­டங்­கள் பற்றி நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் கரி­மக் கழிவை உறிஞ்­சக்­கூ­டிய இயற்கை வளத்தை அதி­கப்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் தேசிய பூங்­காக் கழ­கமும் ஓசி­பிசி வங்­கி­யும் பங்­காளித்­துவ உடன்­பாடு ஒன்­றில் கையெ­ழுத்­திட்டு உள்­ளன.

அதன் ஒரு பகு­தி­யாக அந்­தக் குட்­டை­யில் மரக்­கன்­று­கள் நடப்­படும். புலாவ் உபின் தீவின் தெற்குக் கரை­யோ­ர­மாக இருக்கும் சுங்கை டுரி­யான் என்ற 4 ஹெக்­டர் பரப்­ப­ள­வுள்ள குட்­டை­களில் அந்­தக் கன்­று­கள் நடப்­படும்.

அந்த இடத்­திற்கு 'ஓசி­பிசி சதுப்­பு­நி­லப் பூங்கா' என்று பெய­ரி­டப்­படும். பணி­கள் 2026ல் முடி­வடை­யும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.