புலாவ் உபினில் கைவிடப்பட்ட வளர்ப்பு தாவர குட்டைகளில் 8,000 சதுப்புநில மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டங்கள் பற்றி நேற்று அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் கரிமக் கழிவை உறிஞ்சக்கூடிய இயற்கை வளத்தை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் தேசிய பூங்காக் கழகமும் ஓசிபிசி வங்கியும் பங்காளித்துவ உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளன.
அதன் ஒரு பகுதியாக அந்தக் குட்டையில் மரக்கன்றுகள் நடப்படும். புலாவ் உபின் தீவின் தெற்குக் கரையோரமாக இருக்கும் சுங்கை டுரியான் என்ற 4 ஹெக்டர் பரப்பளவுள்ள குட்டைகளில் அந்தக் கன்றுகள் நடப்படும்.
அந்த இடத்திற்கு 'ஓசிபிசி சதுப்புநிலப் பூங்கா' என்று பெயரிடப்படும். பணிகள் 2026ல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

