வேளாண் உணவுப்பொருள்: நடப்புக்கு வந்த புதிய தரங்கள்

வேளாண் உணவுப்பொருள்: நடப்புக்கு வந்த புதிய தரங்கள்

1 mins read
8b1be417-e96d-45a8-baf0-9fcfa9aae927
-

வேளாண் உணவு தொடர்­பான மூவகை தரங்­கள் அதி­கா­ர­பூர்­வ­மாக நடப்­புக்கு வந்­துள்­ளன.

அவை விவ­சா­யி­க­ளுக்கு அவர்­க­ளின் நடை­முறை தொடர்­பி­லான பசுமை வழி­காட்டி நெறிமுறை­களை நிர்­ண­யிக்­கும்.

அதோடு, உள்­ளூ­ரில் விளை­யும் காய்­க­றி­கள், கட­லு­ணவு, முட்டை­கள் வாங்க விரும்­பும் சிங்­கப்­பூ­ரர்களுக்கு வலு­வான உத்­த­ர­வாதத்தையும் அது வழங்­கும்.

அந்­தத் தரங்­களை சிங்­கப்­பூர் உற்­பத்­தித்­துறைக் கூட்­ட­மைப்­பும் தர உரு­வாக்க நிறு­வ­னம் என்ற அமைப்­பும் உரு­வாக்கி உள்ளன.

புதிய தரங்­கள், ஏற்­கெ­னவே நடப்­பில் இருந்­து­வந்த சிங்­கப்­பூர் உணவு முக­வை­யின் 'சிங்­கப்­பூர் நல்ல வேளாண்மை நடை­மு­றை' திட்­டங்­க­ளுக்­குப் பதி­லாக இடம்­பெறுகின்­றன.

சிங்­கப்­பூ­ரில் பயன்­ப­டுத்­தப்­படும் முட்­டை­களில் 30 விழுக்­காடு உள்­ளூ­ரி­லேயே உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன.

அதே­வே­ளை­யில் காய்­க­றி­களைப் பொறுத்­த­வரை 4%தான் இங்­கேயே விளை­விக்­கப்­ப­டு­கின்றன. கட­லு­ண­வைப் பொறுத்­த­வரை இந்த அளவு 8%ஆக இருப்­ப­தா­கத் தெரி­கிறது.