ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் இன்று ஒரு மணிநேரத்தில் 100க்கும் அதிகமான பைகளை நிரப்பும் அளவுக்கு குப்பை சேகரிக்கப்பட்டது. சிகரெட் துண்டுகள், பிளாஸ்டிக் பொட்டலங்கள், முகக்கவசங்கள், தாட்கள் போன்ற தேவையற்ற பொருட்கள் எடுக்கப்பட்டன.
மோல்மின் - கெய்ன்ஹில் தொகுதி குடியிருப்பாளர்கள், தேசிய இளையர் மன்ற உறுப்பினர்கள், தொண்டூழியர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளிட்ட 400 பேர் இந்தத் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு காலாண்டும் எஸ்ஜி தூய்மை தினத்தின் ஒரு அங்கமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் சென்றாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதனையொட்டி பொதுப் பூங்காக்கள், திறந்தவெளிகள், குடியிருப்புப் பேட்டைகளின் அடித்தளங்கள் ஆகியவை காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை சுத்தம் செய்யாமல் விடப்படும். துப்புரவாளர்களின் பணியை எடுத்துக்காட்ட இவ்வாறு செய்யப்படுகிறது.