டிமென்ஷியா எனும் மூத்தோர் ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்த சேவைகளைக் கொண்ட முதல் குடியிருப்பாக உருவாகவுள்ளது இயோ சூ காங் வட்டாரம்.
அவ்வட்டாரத்தில் 40 விழுக்காட்டுக்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் 65 வயது மேற்பட்ட மூத்தோர்.
இயோ சூ காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹொன் வெங், அந்த தொகுதி வரும் 2025ஆம் ஆண்டுக்குள் முழுமையாக டிமென்ஷியா நோயாளி
களுக்கு உகந்த வட்டாரமாக மாறிவிடும் என்று கூறினார்.
குடியிருப்பாளர்களின் வயது அடிப்படையிலும் அங்குள்ள வசதி
களின் அடிப்படையிலும் அந்தத் தொகுதி மூத்தோருக்கான ஒரு வட்டாரமாகத் திகழ்கிறது என்று திரு யிப் கூறினார்.
அங்குள்ள வசதிகளும் கட்டமைப்பும் மூத்தோருக்கு உகந்ததாக அமைய வேண்டும் என்று திரு யிப் வலியுறுத்தினார்.
அவ்வட்டாரத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களில் ஒன்று குடியிருப்பாளர்களுக்கான தனிப்பட்ட எச்சரிக்கை பொத்தான்.
தற்போது அங் மோ கியோ அவென்யூ 4ல் உள்ள புளோக் 626, புளோக் 641 ஆகியவற்றில் கிட்டத்தட்ட 80 மூத்த குடியிருப்பாளர்களுக்கு இத்திட்டம் உதவுகிறது.
இந்தத் திட்டம் மூலம் உதவி தேவைப்படும் மூத்தோர் தங்கள் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிவப்பு பொத்தானை அழுத்தினால் அருகில் உள்ள டிஎச்கே மூத்தோர் நடவடிக்கை நிலையத்திலிருந்தோ கேர்லைன் உதவி எண்ணில் இருந்தோ ஊழியர் ஒருவர் தொலைபேசி வழி அழைத்து முதியவருடன் பேசுவார்.
சாங்கி பொது மருத்துவமனை கேர்லைன் உதவி எண்ணை நிர்வகிக்கிறது.
இந்தச் சேவை பெற்ற முதியவர் ஒருவரை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சென்று பார்வையிட்டார்.
இயோ சூ காங் வட்டாரத்திற்கு நேற்று அமைச்சர்நிலை வருகை அளித்த துணைப் பிரதமர் அங்கு பல குடியிருப்பாளர்களைச் சந்தித்து அளவளாவினார்.
கொவிட்-19 காரணமாகக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு இதுபோன்ற அமைச்சர்நிலை வருகைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இனிமேல் 4ஜி தலைவர்கள் இந்த அமைச்சர்நிலை வருகையைத் தொடர்வார்கள் என்று திரு லாரன்ஸ் வோங் கூறினார்.

