திருடப்பட்ட சிலைகள் சிங்கப்பூரிலிருந்து திரும்பும் என காத்திருக்கும் தமிழ்நாட்டு கிராம மக்கள்

திருடப்பட்ட சிலைகள் சிங்கப்பூரிலிருந்து திரும்பும் என காத்திருக்கும் தமிழ்நாட்டு கிராம மக்கள்

2 mins read
098c3de9-cf6d-4ca4-a9db-ea40c94578a4
தமிழ்நாடு காவல்துறை சிலைத் திருட்டுப் பிரிவு அளித்த சோமாஸ்கந்தர் சிலைகளின் புகைப்படம். இடது: சிவன்கூடலில் உள்ள சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம். படம்: ரோஹினி மோகன் -
multi-img1 of 2

தமிழ்­நாட்­டின் திருப்பெ­ரும்­புதூர் தொழில்­து­றைக்­குப் பெயர்­போ­னது. அங்கே சிவன்­கூ­டல் எனும் கிரா­மத்­தில் நெல் வயல்­க­ளுக்கு மத்­தி­யில் ஒரு சிவன் ஆல­யம் உள்­ளது. கிட்­டத்­தட்ட 900 ஆண்­டு­

க­ளுக்கு முன்­பாக ராஜராஜ சோழ­னால் கட்­டப்­பட்­டது அந்த சிவக்­கொ­ழுந்­தீஸ்­வ­ரர் ஆல­யம்.

ஆல­யத்­தில் சிவ­லிங்­கம் இருந்­தா­லும் அந்த கிராம மக்­கள் கடந்த பல்­லாண்­டு­க­ளாக அந்­தச் சிவ­லிங்­கத்­தி­டம் செய்யும் பிரார்த்­தனை ஒன்­று­தான். தங்­கள் ஆல­யத்­தி­லி­ருந்து திரு­டப்­பட்ட சோமாஸ்­கந்தர் வெண்­க­லச் சிலை­கள் திரும்பி வந்­து­வி­டாதா என்­ப­து­தான் அது.

சிவன், பார்­வதி, அவர்­க­ளது புதல்­வன் ஸ்கந்­த­னு­டன் (முரு­கன்) வீற்­றி­ருக்­கும் மூன்று வெண்­க­லச் சிலை­களே திரு­டப்­பட சிலை­கள்.

கிட்­டத்­தட்ட 54 சென்டி­மீட்­டர் உய­ரத்­தில் கிளி­மூக்­கு­க­ளு­டன் அழ­காக வடிக்­கப்­பட்ட அந்தச் சிலை­கள் ஒன்­ப­தாம் நுற்­றாண்டு முதல் 13ஆம் நூற்­றாண்டு வரை தென் இந்­தியா, இலங்கை, கம்­போ­டியா, இந்­தோ­னீ­சியா போன்ற தென் கிழக்கு ஆசிய வட்­டா­ரத்­தை­யும் ஆண்ட சோழப் பரம்­ப­ரை­யில்­ நி­ல­விய சிற்ப வேலை­க­ளைப் பிர­தி­

ப­லிக்­கின்­றன.

ஒரு கட்­டத்­தில் எங்கு இருக்­கின்­றன என்றே தெரி­யா­மல் சிவன்கூடல் மக்கள் இருந்த நிலையில், 2015ஆம் ஆண்டு சிலை ஆர்­வ­லர்­கள், தமிழ்­நாடு காவல் துறை­யின் சிலை திருட்­டுப் பிரிவு ஆகி­ய­வற்­றின் விசா­ர­ணை­யின் உத­வி­யு­டன் சிலை­கள் இருக்­கும் இடம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அவை சிங்­கப்­பூ­ரின் ஆசிய நாக­ரிக அரும்­பொ­ரு­ள­கத்­தில்­தான் உள்­ளன என்பது தெரியவந்தது.

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் தொல்­பொ­ருள் ஆர்­வ­லர் திரு விஜய் குமார், சோமாஸ்கந்தர் சிலை­கள் தமிழ்நாட்­டின் சிவன்­கூ­ட­லில் உள்ள ஆல­யத்­தி­லி­ருந்து திரு­டப்­பட்­டவை என்­ப­தைக் கண்­டு­பி­டித்­தார். 1916ல் வெளி­யான புத்­த­கம் ஒன்­றில் இருந்த புகைப்­ப­டத்தை திரு விஜய் குமார் ஒப்­பிட்­டுப் பார்த்­த­போது உண்மை வெளிப்­பட்­டது.

சிலை­கள் தங்­க­ளி­டம்­தான் உள்­ளன என்­பதை ஆசிய நாக­ரிக அரும்­பொ­ரு­ள­கத்­தின் பேச்­சா­ளர் உறுதிசெய்­துள்­ளார்.

சிலை­க­ளைத் திரும்ப தமி­ழ­கத்­திற்­குக் கொண்டு வரு­வ­தற்கு இந்­தி­யா­வும் சிங்­கப்­பூ­ரும் கடந்த ஆண்டிலிருந்து செயல்­பட்டு வரு­கின்­றன. அது­வரை சோமாஸ்­கந்­தர் மீண்­டும் தங்­கள் ஊருக்கு வரும் நாளுக்­கா­க ­சி­வன்கூ­ட­லின்

கிட்­டத்­தட 120 குடும்­பங்­கள் காத்­தி­ருக்­கின்­றன.