'கடும் கட்டுப்பாடுகள் இன்றி எக்ஸ்பிபியை சமாளித்துள்ளோம்'

'கடும் கட்டுப்பாடுகள் இன்றி எக்ஸ்பிபியை சமாளித்துள்ளோம்'

1 mins read
ee7adc8a-5cf0-4e69-9d9d-5e06b82398df
கூ டெக் புவாட் மருத்துவமனையில் நடைபெற்ற அனைத்துலக சுகாதார நிர்வாகப் பயிற்சிக் கழகத்தின் 20வது ஆண்டு விழா நிகழ்வில் சுகாதாரத் துறையினரைச் சந்தித்துப் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங்.படம்: ஸ்ட்ரெட்ய்ஸ் டைம்ஸ் -

எக்ஸ்பிபி கொவிட்-19 கிருமி வகையால் ஏற்பட்ட தொற்று அலை தற்போது குறைந்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார். அந்தக் கிருமிவகையை சிங்கப்பூர் வெற்றிகரமாக முறியடித்துவிட்டது போலத் தெரிகிறது என்று அவர் கூறினார்.

அனைத்துலக சுகாதார நிர்வாகப் பயிற்சிக் கழகத்தின் 20வது ஆண்டு விழாவில் திரு ஓங் நேற்று கலந்துகொண்டு பேசினார். கடுமையான கட்டுப் பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் அணுகுமுறை ஆகியவை இல்லாது எக்ஸ்பிபி கிருமிவகையை சிங்கப்பூர் நன்கு சமாளித்திருப்பதாக அவர் தெரிவித்தார். நிலைமை மோச­

ம­டைந்­தி­ருந்­தால் உட்­பு­றங்­களில் முகக்­க­வ­சம் அணி­வ­தைக் கட்­டா­ய­மாக்­கு­வது, தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான நட­வ­டிக்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது போன்ற விதி­மு­றை­களை மீண்­டும் விதிக்க அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு தயா­ராக இருந்­த­தாக அமைச்­சர் ஓங் கூறி­னார்.

"நல்ல வேளை­யாக எதிர்­பார்த்­ததை­விட தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை விரை­வாக உச்­சம் அடைந்து பிறகு குறை­யத் தொடங்­கி­யது," என்­றார் திரு ஓங்.

நேற்று முன்­தி­னம் நண்­ப­கல் நில­வ­ரப்­படி மேலும் 3,240 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. இதற்­கி­டையே, வேறொரு கிரு­மி­வ­கை­யால் இன்­னொரு கொவிட்-19 அலை ஏற்­பட்­டால் சில பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டக்­

கூ­டும் என்­றும் அதற்கு சிங்­கப்­பூ­ரர்­கள் தயா­ராக இருக்க வேண்­டும் என்­றும் அமைச்­சர் ஓங் வலி­யு­றுத்­தி­னார்.