மகன், பேரனின் சிரிப்பைக் காண ஏங்குகிறேன்: முதலாளியின் துன்புறுத்தலால் பார்வை இழந்த பணிப்பெண் குமுறல்

மகன், பேரனின் சிரிப்பைக் காண ஏங்குகிறேன்: முதலாளியின் துன்புறுத்தலால் பார்வை இழந்த பணிப்பெண் குமுறல்

1 mins read
8fe3709a-8af5-4e1f-a5d6-803cd87007dd
பார்வை இழந்த திருவாட்டி சுஜியம் சமாட் ரடிமாவுடன் (நடுவில்) இந்தோனீசியத் தூதரகத்தைச் சேர்ந்த ஆலோசகர் யோசெப் டுட்டு (வலது), பணிப்பெண் மையத்தைச் சேரந்த அதிகாரி. படம்: பணிப்பெண் மையம் -

முத­லா­ளி­யின் துன்­பு­றுத்­த­லால் இரு கண்­க­ளி­லும் பார்­வை­யி­ழந்த இந்­தோ­னீ­சி­யப் பணிப்­பெண் திரு­வாட்டி சுஜி­யம் சமாட் ரடிமா, தமது மகன் மற்­றும் பேர­னின் சிரிப்­பை இனி காண இய­லாது என்று சொல்­லொண்­ணாத் துய­ரு­டன் தெரி­வித்­தார்.

2020ஆம் ஆண்­டில் கிட்­டத்­தட்ட ஆறு மாதங்­கள் அவ­ரது முத­லாளி அவரை அடித்­துத் துன்­பு­றுத்­தி­னார்.

இதன் கார­ண­மாக அவ­ரது இடது காதும் உருக்­கு­லைந்து காணப்­ப­டு­கிறது.

இந்­தோ­னீ­சி­யா­வில் உள்ள அவ­ரது சொந்த ஊரான செமா­ராங்­கி­லி­ருந்து 51 வயது திரு­வாட்டி சுஜி­யம் நேற்று வாட்ஸ்­அப் அழைப்பு மூலம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்று பேசி­னார்.

"நான் நம்­பிக்கை இழந்­து­விட்­டேன். என்­னால் பார்க்க முடி­ய­வில்லை. எனது மகன், பேர­னின் சிரிப்­பைப் பார்க்க முடி­வில்லை," என்­றார் அவர்.

அவ­ரது சிங்­கப்­பூர் முத­லா­ளி­யான 43 வயது உம்மி கல்­சும் அலி அவரை தொடர்ந்து குத்­தி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. ஒரு­முறை துணி­யைக் காய­வைக்க உத­வும் கரு­வி­யைக் கொண்டு திரு­வாட்டி சுஜி­யத்­தின் கண்­களில் உம்மி கல்­சும் அடித்­தார்.

பணிப்­பெண்­ணைத் துன்­பு­றுத்­தி­ய­தற்­காக உம்மி கல்­சு­முக்கு 10 ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னை­யும் $4,500 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

பார்வை இழந்த கார­ணத்­தி­னால் உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் எண்­ணம் திரு­வாட்டி சுஜி­யத்­துக்கு ஏற்­பட்­ட­தாக சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் இந்­தோ­னீ­சி­யத் தூத­ர­கத்­தில் உள்ள ஆலோ­ச­க­ரான திரு யோசெப் டுட்டு தெரி­வித்­தார். எனவே, அவ­ரு­டன் கூடு­தல் நேரம் செல­விட்­ட­தா­க­வும் அவர் விரும்­பும் உணவை வாங்­கித் தர அவரை வெளியே அழைத்­துச் சென்­ற­தா­க­வும் திரு டுட்டு கூறி­னார்.