பாதுகாப்பு விதிமீறல்: 558 நிறுவனங்களுக்குத் தண்டனை

பாதுகாப்பு விதிமீறல்: 558 நிறுவனங்களுக்குத் தண்டனை

2 mins read
ed71499c-b7af-4e5c-b070-8dc5183e832c
-

வேலை­யி­டப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை சரி­யான முறை­யில் நடை­மு­றைப்­ப­டுத்த தவ­றி­ய­தற்­காக 500க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­

க­ளுக்கு மனி­த­வள அமைச்சு வேலை நிறுத்த உத்­த­ர­வைப் பிறப்­பித்­தது அல்­லது அப­ரா­தம் விதித்­தது.

மனி­தள அமைச்சின் அதி­கா­ரி­கள் நடத்­திய சோத­னை­க­ளின்­போது அந்த நிறு­வ­னங்­கள் பாது­காப்பு விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு நடக்­க­வில்லை என்­பது தெரி­ய­வந்­தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்­கும் அக்­டோ­பர் மாதம் 17ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் ஒன்­பது வார அதி­ர­டிச் சோதனை நட­வ­டிக்­கை­கள் நடத்­தப்­பட்­டன.

தீவெங்­கும் கட்­டு­மா­னம், உற்­பத்தி, போக்­கு­வ­ரத்து, தங்­கு­மி­டம், உண­வுச் சேவை­கள் போன்ற துறை­க­ளைச் சேர்ந்த 750க்கும் மேற்­பட்ட வேலை­யி­டங்­களில் திடீர் சோதனை நடத்­தப்­பட்­டது.

அப்போது 558 நிறு­வ­னங்­க­ளுக்கு மனி­த­வள அமைச்சு தண்­டனை விதித்­தது. வேலை­யி­டங்­களில் ஊழி­யர்­கள் வழுக்கி விழு­வது, தடுக்கி விழு­வது, உய­ர­மான இடங்­க­ளி­லி­ருந்து விழு­வது போன்­ற­வற்­றைத் தடுக்­கும் நோக்­கு­டன் சோத­னை­கள் நடத்­தப்­பட்­டன. இவ்­வாண்­டின் முதல் பாதி­யில் வேலை­யி­டங்­களில் ஊழி­யர்­க­ளுக்கு ஏற்­பட்ட மிக மோச­மான காயங்­க­ளுக்கு இந்த மூன்­றும் முக்­கியக் கார­ணங்கள் என்று தெரி­விக்­கப்­பட்­டது. விதி­மு­றைக்கு உட்­ப­டாத நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக 1,828 அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டது. இதில் 12 வேலை நிறுத்த உத்­த­ர­வு­களும் $499,150 பெறு­மா­ன­முள்ள 232 அப­ரா­தங்­களும் அடங்­கும்.

சில நிறு­வ­னங்­கள், வேலை­

இ­டத்­தின் தரையை முறையாகப் பரா­ம­ரிக்­க­வில்லை என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­ட­போது தரை­யில் சில தரை ஓடு­கள் இல்­லா­த­தைக் கண்­டு­பி­டித்­த­னர்.

அது­மட்­டு­மல்­லாது, சில வேலை­யி­டங்­க­ளின் தரை ஈர­மாக இருந்­த­தா­க­வும் அத­னால் ஊழி­யர்­கள் வழுக்கி விழும் அபா­யம் இருந்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

சில ஊழி­யர்­கள் தகுந்த கால­ணி­க­ளைப் பயன்­ப­டுத்­த­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. இத­னால் வழுக்கி விழு­வது, தடுக்கி விழு­வது, உய­ர­மான இடத்­தி­

லி­ருந்து விழு­வது ஆகி­ய­வற்­றி­ட­மி­ருந்து அவர்­க­ளுக்­குத் தகுந்த பாது­காப்பு வழங்­கப்­ப­ட­வில்லை என்று அதி­கா­ரி­கள் கூறி­னர்.

"வேலை­யி­டத்­தில் பாது­காப்­புக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதை இது காட்­டு­கிறது. விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு நடக்­காத நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ரா­கத் தொடர்ந்து நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

"பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு நிறு­வன உரி­மை­யா­ளர்­கள், மேற்­பார்­வை­யா­ளர்­கள், ஊழி­யர்­கள் ஆகிய அனை­வ­ரும் முக்­கி­யத்­து­வம் கொடுக்க வேண்­டும். அதில் மெத்­த­னப்­போக்­கு­டன் இருந்­து­

வி­டக்­கூ­டாது. அனை­வ­ரும் விழிப்­பு­டன் இருக்க வேண்­டும் என எதிர்­பார்க்­கி­றோம்," என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.