வசதி குறைந்த தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கு உதவும் வகையில் $3.7 மில்லியனுக்கும் அதிகமான புதிய மானியம் ஒன்றை தெமாசெக் அறநிறவனம் வழங்குகிறது. அதிகரித்து வரும் விலைவாசியைச் சமாளிக்க மாணவர்களுக்குக் கைகொடுக்கும் வண்ணம் இந்த மானியம் வழங்கப்படுகிறது.
வழங்கப்படும் மானியத்தொகை தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் மூன்று ஆதரவுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக தெமாசெக் அறநிறுவனம் ஏற்கெனவே இவ்வாண்டு $3.2 மில்லியன் தருகிறது. கிட்டத்தட்ட 2,440 மாணவர்களுக்கு உதவும் மாதாந்திர நிதி உதவித் திட்டத்தை மானியம் ஆதரிக்கும். அதுமட்டுமல்லாது, கூடுதல் நிதி உதவித் திட்டம் மூலம் ஏறத்தாழ 1,875 மாணவர்
களுக்கு $562,500 நிதி ஒதுக்கப்படும். சிறப்பு மாணவர் உதவித் திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட 2,020 மாணவர்களுக்கும் உதவி கிடைக்கும். 500 மாணவர்களுக்கான மடிக்கணினி செலவுகள் ஈடுசெய்யப்படும்.
இந்த மானியத்தால் பலனடையும் மாணவர்களில் 20 வயது திரு அல் ஃபியான் அல் லாமினும் ஒருவர். தமது குடும்பத்தின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பொதுவாக அவர் பள்ளி இடைவேளையின்போது சாப்பிடுவதில்லை. வெறும் தண்ணீர் அருந்தி பசியைப் போக்கிக்கொண்டார்.
புதிய மானியம் மூலம் அவரால் இனி பள்ளி இடைவேளையின்போது உணவருந்தலாம். போக்குவரத்துச் செலவுகள் பற்றியும் அவர் கவலைப்படத் தேவைஇல்லை.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் வான்வெளி விமான மிண்ணனுவியல் துறையில் பயின்று வரும் 17 வயது ஃபிலிப் டி கிரெட்சர் இந்த மானியத் திலிருந்து நிதி உதவி பெறும் மற்றொரு மாணவர். நிதியுதவி கிடைப்பதால் வாரயிறுதிகளில் வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இனி அவருக்கு இருக்காது.
தமக்குக் கிடைக்கும் நிதி
உதவி பாதுகாப்பு உணர்வை அளிப்பதாக திரு டி கிரெட்சர் கூறினார்.
"தொடர்ந்து முன்னேற
ஆதரவு இருக்கிறது என்ற உணர்வையும் ஊக்குவிப்பையும் இம்மாதிரியான திட்டங்கள் தருகின்றன," என்றார் அவர்.