தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கெட் தீவில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிங்கப்பூரர் மரணம்

1 mins read
948a9d88-be7b-4297-889d-34d77d3f2551
-

தாய்­லாந்­தின் புக்­கெட் தீவில் நேற்று முன்­தி­னம் காலை நிகழ்ந்த சாலை விபத்­தில் 29 வயது சிங்­கப்­பூர் ஆட­வர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.

அவர் ஓட்­டிச்­சென்ற மோட்­டார்­சைக்­கிள், ஆறு­சக்­கர சரக்கு வாக­னத்­தின்­மீது மோதி­யது. இதில் மோட்­டார்­சைக்­கி­ளின் பின்­னி­ருக்­கை­யில் அமர்ந்­தி­ருந்த நட்­டலி சிங்­ஹுய் யி என்ற இன்­னொரு சிங்­கப்­பூ­ரர் காய­ம­டைந்­தார் என்று தி பேங்­காக் போஸ்ட் செய்தி தெரி­விக்­கிறது. அவ­ருக்­கும் வயது 29.

கத்து மாவட்டத்தில் நிகழ்ந்த இவ்­வி­பத்து குறித்து காலை 11.45 மணி­ய­ள­வில் காவல்­து­றைக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­ட­தாக அச்­செய்தி கூறி­யது. மலைப்­பாங்­கான சாலை­யில் விபத்து நிகழ்ந்­த­தா­க­வும் அச்­செய்தி குறிப்­பிட்­டது.

எதி­ரில் வந்த அந்த மோட்­டார்­சைக்­கிள், வளை­வில் கட்­டுப்­பாட்டை இழந்து தமது வாக­னத்­தின்­மீது மோதி­ய­தாக அந்­தச் சரக்கு வாக­னத்­தின் ஓட்­டு­நர் காவல்­து­றை­யி­டம் கூறி­னார்.

மோட்­டார்­சைக்­கிளை ஓட்­டிச்­சென்ற அந்த ஆட­வர் சம்­பவ இடத்­தி­லேயே மாண்­டு­விட்­டார் என்று கூறப்­பட்­டது. மாண்­ட­வ­ரின் குடும்­பத்­திற்­குத் தக­வல் தெரி­விக்­கும்­வரை அவ­ரின் பெயர் வெளி­யி­டப்­ப­டாது.

மாண்­ட­வ­ரும் காய­ம­டைந்த பெண்­ணும் பத்­தோங் மருத்­து­வ­மனைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டனர்.

இவ்­வி­பத்து தொடர்­பில் தாய்­லாந்து அதி­கா­ரி­க­ளு­டன் தொடர்­பில் உள்­ளோம் என்­றும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு தூத­ரக உதவி வழங்­கப்­படும் என்­றும் வெளி­யு­றவு அமைச்சு கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

"மாண்ட சிங்­கப்­பூ­ர­ரின் குடும்­பத்­தி­ன­ருக்கு வெளி­யு­றவு அமைச்சு இரங்­கல் தெரி­வித்­துக்­கொள்­கிறது. காய­முற்ற சிங்­கப்­பூ­ரர் விரை­வில் முழு­மை­யாக நலம்­பெ­று­வார் என்று நம்­பு­கி­றோம்," என்று அமைச்­சின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.