ஈசூனில் வசிக்கும் 150 குடும்பங்களுக்கு கோழிக்கறி

ஈசூனில் வசிக்கும் 150 குடும்பங்களுக்கு கோழிக்கறி

1 mins read
586752c5-d724-4a79-861a-dbb21a9b881e
ஈசூன் புளோக் 162ல் குடியிருப்போர் இலவச அட்டையைப் பயன்படுத்தி இயந்திரத்தில் இருந்து தங்கள் விருப்பப்படி தயார் உணவைப் பெறுகிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஈசூன் ஸ்தி­ரீட் 11ல் உள்ள புளோக் 162ன் காலித்­த­ளத்­தில் 'ஃபிரி ஃபுட் ஃபார் ஆல்' என்ற உணவு அறப்­பணி அமைப்பு, இயந்­தி­ரம் ஒன்றை அமைத்து இருக்­கிறது.

இம்­மா­தம் 13ஆம் தேதி கடைப்­பி­டிக்­கப்­படும் உலக பரிவு நாளை­யொட்டி அமைக்­கப்­பட்டுள்ள அந்த இயந்­தி­ரம், அந்த வட்­டா­ரத்­தில் வசிக்­கும் 150 குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளுக்­கும் முதி­ய­வர்­க­ளுக்­கும் உத­வும்.

அதி­லி­ருந்து அவர்­கள் சமைக்­கத் தயா­ராக உள்ள கோழிக்­கறியை மாதாமாதம் பெற­லாம்.

ஒவ்­வோர் குடும்­பத்­திற்­கும் கட்­ட­ணத்­து­டன்­கூ­டிய ஓர் அட்டை வழங்­கப்­பட்டுள்ளது. அதைக் கொண்டு ஒவ்­வொரு மாத­மும் அவர்­கள் 200 கிராம் எடை­யுள்ள ஏழு கோழிப் பொட்­ட­லங்­க­ளைப் பெறலாம்.

ஒவ்­வொரு மாதத் தொடக்­கத்­தி­லும் அந்த அட்­டை­யில் தொடர்ந்து பணம் போடப்­படும்.

அந்த இயந்­திர தொடக்க நிகழ்ச்­சி­யில் உள்­துறை, தேசிய வளர்ச்சி துணையமைச்­சர் முகம்­மது ஃபைசல் இப்­ரா­ஹிம் கலந்­து­கொண்­டார்.