தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிவ­தாஸ்-இந்து அறக்­கட்­டளை வாரி­யக் கல்­வி­நிதி: உயர்கல்வி மாணவர்களுக்கு இதுவரை மொத்தம் $5 மில்லியன் உதவி

3 mins read
1cc5118a-6ef6-4129-a252-ccee637ad3e1
சிவ­தாஸ்-இந்து அறக்­கட்­டளை வாரி­யக் கல்­வி­நிதி திட்­டத்தில் உதவி பெற்ற மாணவர்களில் சிலர். படம்: இந்து அறக்கட்டளை வாரியம் -

ஆ. விஷ்ணு வர்­தினி

ஆண்­டு­தோ­றும் உயர்­கல்வி மாண­வர்­க­ளுக்கு நிதி உதவி வழங்கி வரும் சிவ­தாஸ்-இந்து அறக்­கட்­டளை வாரி­யக் கல்­வி­நிதித் திட்­டம் இவ்­வாண்டு 125 மாண­வர்­க­ளுக்கு $231,500 அள­வி­லான உத­வித்­தொகை வழங்­கி­யுள்­ளது.

கடந்த பத்­தாண்­டு­க­ளாக இயங்கி வரும் இந்த கல்­வி­நிதியின் ­மூ­லம், இவ்­வாண்­டு­டன் மொத்­தம் ஐந்து மில்­லி­யன் வெள்­ளிக்கு மேல் நிதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­கள், தொழில்­நுட்பக் கல்­விக்­க­ழ­கங்­கள், பொது பல்­க­லைக்­க­ழ­கங்­கள், தனி­யார் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் என நான்கு பிரி­வு­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் நேற்று ஸ்ரீ ஸ்ரீ­நி­வாசப் பெரு­மாள் கோயி­லின் பிஜிபி மண்­ட­பத்­தில் கல்­வி­நிதி விரு­து­க­ளைப் பெற்­றுக்­கொண்­ட­னர்.

அவ்­வாறு பய­ன­டைந்த பி.எஸ்.பி கல்­விக்­க­ழ­கத்­தின் தாதி­யர்­துறை மாண­வ­ரான திரு­மதி சித்ரா சண்­மு­கம், ஒற்­றைத் தாயா­ராக தனது மூன்று மகள்­க­ளை­யும் பரா­ம­ரித்­துக்­கொண்டே பகு­தி­நே­ர­மாக மேற் ­ப­டிப்பு மேற்­கொள்­வ­தற்கு சிவ­தாஸ்-இந்து அறக்­கட்­டளை வாரிய கல்­வி­நிதி பெரி­தும் கைகொ­டுத்­துள்­ள­தாக பகிர்ந்­து­கொண்­டார்.

தற்போது கே. கே. மருத்­து­வ­ ம­னை­யில் மூத்த தாதி­ய­ராக பணி­பு­ரி­யும் 41 வயது திரு­மதி சித்ரா, மேற்­ப­டிப்­புக்­குப் பின்­னர் தாதிமை நிர்­வா­கி­யா­கும் எண்­ணம் கொண்­டுள்­ளார்.

"என்ன வந்­தா­லும் எனது வாழ்க்­கைத்­தொ­ழி­லில் மேன்­மே­லும் உய­ர­வேண்­டும் என்ற திடத்தை இந்த ஊக்­கத்­தொகை அளித்­துள்­ளது," என்­றார் அவர்.

பாலர் பள்ளி தமி­ழா­சி­ரி­ய­ரான 21 வயது பவானி சுப்­பி­ர­ம­ணி­ய­மும் இக்­கல்­வி­நி­தியைப் பெற்றுள்ளார். ஆசிய அனைத்­து­லகக் கல்­லூ­ரி­யில் ஆரம்­பக்­கல்வி பயி­லும் அவர், உடற்குறையுள்ள பாட்டி உட்­பட ஏழு பேரைக் கொண்ட குடும்­பத்­திற்­காக உழைத்து வரு­கி­றார்.

பெற்­றோ­ரு­டன் வீட்­டுச் செல­வு­க­ளைக் கவ­னித்து வரும் அவ­ருக்கு சுய­மாக பகு­தி­நேரப் படிப்பை மேற்­கொள்ள இக்­கல்­வி­நிதி உத­வி­யுள்­ள­து.

மற்­றோர் இளை­ய­ரான திரு ரதி­ஷன் ஹரி­ஹ­ர­னுக்கு, சிங்­கப்­பூர் ஏர்­லைன்­ஸின் கேபின் குழு­வில் இணை­வது ஒரு நீண்­ட­கால ஆசை.

முத­லில் பொறி­யி­யல் பயின்ற அவர், விருந்­தோம்­பல் துறை­யில் தனது ஆர்­வத்­தைக் கண்­ட­றிந்­த­தன் பின்­னர் தற்­போது சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழ­கத்­தில் விருந்­தோம்­பல் வர்த்­தகப் படிப்பு பயின்று வரு­கி­றார்.

ஒற்­றைத் தாயா­ராக தன்னை கவ­னித்து வரும் அம்­மா­வுக்கு பார­மாக இல்­லா­மல், சொந்தக் காலில் நிற்­ப­தற்கு இக்­கல்­வி­நிதி உத­வு­வ­தாக அவர் கூறி­னார்.

இவ்­வாண்­டின் மாண­வர்­க­ளி்ல், மொத்­தம் 49 பேர் தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழ­கங்­க­ளை­யும் 32 பேர் பல­து­றைத் தொழில் கல்­லூ­ரி­க­ளை­யும் சேர்ந்­த­வர்­கள்.

மேலும் 16 பேர் உள்­ளூர் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளை­யும் 28 பேர் தனி­யார் கல்வி நிலை­யங்­க­ளை­யும் சேர்ந்த மாண­வர்­கள்.

தொடர்ந்து உழைக்க ஊக்குவிப்பு

கடி­ன­மாக உழைத்து இக்­கல்­வி­ நி­தி­யைப் பெறும் அனைத்து மாண­வர்­க­ளை­யும் மேன்­மே­லும் தொடர்ந்து உழைப்­ப­தற்கு இவ்­ விருது ஊக்­கு­விக்­கும் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார், சிவ­தாஸ்-இந்து அறக்­கட்­டளை வாரி­யக் கல்வி நிதி­யின் தலை­வ­ரும் இந்து ஆலோ­சனை மன்­றத்­தின் துணைத் தலை­வ­ரு­மான திரு என். புரு­ஷோத்­த­மன்.

இவ்­வி­ருது சமூக சேவை­யைக் கட்­டா­யப்­ப­டுத்­தா­விட்­டா­லும், மாண­வர்­கள் தம் வாழ்­வில் மேம்­ப­டு­வ­தோடு, வசதி குறைந்தோருக்கு உத­விக்­க­ரம் நீட்­ட­வேண்­டும் என்­றும் அவர் ஊக்­கு­வித்­தார்.

2009ஆம் ஆண்டு மறைந்த திரு சிவ­தாஸ் சங்­க­ர­னின் நினை­வாக அமைக்­கப்­பட்­டது, சிவ­தாஸ்-இந்து அறக்­கட்­டளை வாரிய கல்­வி­நிதித் திட்­டம்.

2011லிருந்து ஆரம்­ப­நிலை பள்ளி மாண­வர்­க­ளுக்­கும், 2012லி­ருந்து உயர்­கல்வி மாண­வர்­க­ளுக்­கும் இந்­தக் கல்வி ஊக்­கத் தொகை வழங்­கப்­பட்டு வரு­கிறது.