கரையோரப் பூந்தோட்டங்களை இணைப்பதற்கு புதிய பாலம்

2 mins read
7da1b609-a982-4645-8171-529b1c1a7a42
கரையோரப் பூந்தோட்டங்களின் 10வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் அதிபர் ஹலிமா யாக்கோப், துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திரு வோங்குடன் திரு கோ பூன் வான், திரு மா பாவ் டான் ஆகியோரும் முன்னைய தேசிய வளர்ச்சி அமைச்சர்கள் என்ற முறையில் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கார்­டன்ஸ் பை தி பே எனும் கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­க­ளின் தெற்­கை­யும் கிழக்­கை­யும் இணைக்க ஒரு பாலம் கட்­டப்­ப­ட­லாம் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ கூறி­யுள்­ளார். பே ஈஸ்ட் கார்­டன் எனப்­படும் கரை­யோ­ரக் கிழக்­குப் பூந்­தோட்­டத்தை மேம்­ ப­டுத்­தும் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக பாலம் கட்­டப்­ப­டக்­கூ­டும்.

தற்­போது, பே ஈஸ்ட் பகு­திக்கு மரினா அணைக்­கட்டு வழி­யா­கச் செல்­ல­வேண்­டும்.

சிங்­கப்­பூர் நிறுவனர்கள் நினை­வ­கம் கட்­டுப்­படும் அதே நேரத்­தில், கிழக்­குத் தோட்­டம் ஒரு நீர்­மு­கப்­புத் தோட்­ட­மாக மாற்­றப்­பட்டு வரு­வதை திரு லீ சுட்­டி­னார். கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­க­ளின் 10வது ஆண்டு நிறை­வுக் கொண்­டாட்­டத்­தில் நேற்று அவர் உரை­யாற்­றி­னார்.

பாலத்தை வடி­வ­மைப்­ப­தற்கு ஒப்பந்தப் புள்ளிக்கான கோரிக்கை இவ்­வாண்டு இறு­திக்­குள் விடுக்­கப்­படும் என்று கரை­யோ­ரப் பூந்­தோட்­டத்­தின் தலைமை நிர்­வாகி ஃபீலிக்ஸ் லோ தெரி­வித்­தார்.

2027ஆம் ஆண்டு மீண்­டும் திறக்­கப்­ப­டும்­போது கரை­யோர கிழக்­குப் பூந்­தோட்­டம் துடிப்­பான இட­மாக அமை­யும். தெற்கு, கிழக்கு தோட்­டங்­க­ளுக்கு இடையே பாலம் அமைப்­ப­தன்­வழி அக்­க­வர்ச்­சித் தலங்­க­ளின் மதிப்பு உய­ரும் என்று அவர் கூறி­னார். பாலம் அமைப்­ப­தற்­கு சரி­யான இடம் பற்றி ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கிறது.

அத்­து­டன், கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­களில் கரிம வெளி­யேற்­றத்தை முற்­றி­லும் அகற்­றும் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இரண்­டா­வது புதுப்­பிக்­கக்­கூ­டிய எரி­சக்தி ஆலையை அமைப்­பது பற்­றி­யும் பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கிறது.

பூந்­தோட்­டங்­களில் கரிம வெளி­யேற்­றத்­தைப் படிப்­ப­டி­யா­கக் குறைத்து முற்­றி­லும் நீக்­கு­வ­தற்­கான திட்­டம் அடுத்த ஆண்டு தயா­ரா­கி­ வி­டும்.

இரண்­டா­வது ஆலையை வரு­கை­யா­ளர்­க­ளுக்­குத் திறந்­து­வி­டவும் நீடித்த நிலைத்­தன்மை முக்­கி­யத்­து­வம் பற்றி அவர்­கள் கற்க வசதி ஏற்­ப­டுத்­த­வும் சாத்­தி­யம் உள்­ளது.

கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­க­ளின் தற்­போ­தைய கட்­ட­டங்­களில் கூடு­தல் சூரிய சக்­தித் தக­டு­கள் பொருத்­தப்­பட்டு வரு­வ­தா­க­வும் திரு லோ குறிப்­பிட்­டார். சுமார் 2,300 வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­கள் ஓராண்­டில் பயன்­ப­டுத்­தும் எரி­சக்­தியை உற்­பத்தி செய்­யும் ஆற்­றல் அத்­த­க­டு­க­ளுக்கு இருக்­க­லாம்.

மேலும், குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­கள் கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­களை இல­வ­ச­மா­கக் காண­வும் ஏற்­பாடு செய்­யப்­படும் என்று திரு லீ தெரி­வித்­தார்.

அதற்­காக, சமு­தாய, குடும்ப மேம்­பாட்­டுத் திட்­டத்­தின்­கீழ், குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்கு இல­வ­ச­மாக ஓராண்­டுக்­கான பூந்­தோட்ட நண்­பர்­கள் உறுப்­பி­யம் வழங்­கப்­படும்.

தொடக்­கக் கட்­ட­மாக வரும் ஜன­வரி மாதம், கிரேத்தா ஆயர், புக்­கிட் மேரா வட்­டா­ரங்­களில் வசிக்­கும் குடும்­பங்­க­ளுக்கு உறுப்­பி­னர் அட்டை தரப்­படும். அக்­கு­டும்­பங்­கள் எவ்­வ­ளவு முறை வேண்­டு­மா­னா­லும் ஃபிளவர் டோம் மலர் காப்­ப­கத்­துக்கு இல­வ­ச­மா­கச் செல்ல இது வகை செய்­யும்.

அத்­து­டன், பசுமை இடங்­கள் இருப்­ப­தன் முக்­கி­யத்­து­வத்தை கொவிட்-19 கிரு­மிப்­ ­ப­ர­வல் காட்டி யுள்­ள­தாக அமைச்­சர் லீ கூறி­னார்.

கடந்த 2021ல் கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­க­ளுக்கு 8.3 மில்­லி­யன் குடி­யி­ருப்­பா­ளர்­கள் சென்­ற­னர். பூந்­தோட்­டங்­க­ளுக்கு உள்­ளூர் மக்­கள் சென்­றது இதுவே ஆக அதி­கம்.

அத்­து­டன், டிசம்­பர் வார­யி­று­தி­களில் உள்­ளூர் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­காக, இல­வச இயற்கை சுற்­று­லாக்­கள் கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­களில் நடத்­தப்­படும். நீடித்த நிலைத்­தன்­மை­யைச் சமூ­கத்­தில் ஊக்­கு­விப்­பது இதன் நோக்­கம்.