ரயீசா கானுக்கு நெருக்கமான பிரமுகர்கள் பாட்டாளிக் கட்சியிலிருந்து விலகல்

2 mins read
8b39a535-bc6c-4f31-842e-1b4666ce119a
திரு யுதிஷ்த்­திரா நாதன், திரு­வாட்டி லோ பெயிங். படங்கள்: GOV.SG -
multi-img1 of 2

செங்­காங் குழுத்­தொ­குதி முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரயீசா கானுக்கு நெருக்­க­மான இரண்டு முக்கிய பாட்­டா­ளிக் கட்சி உறுப்பினர்கள் கட்­சி­யி­லிருந்து வில­கி­யுள்­ள­னர்.

திரு யுதிஷ்த்­திரா நாதன், திரு­வாட்டி லோ பெயிங் இரு­வ­ரும் தங்­கள் வில­கல் கடி­தங்­க­ளைப் பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர் பிரித்­தம் சிங்­கி­டம் அளித்­துள்­ள­தாக நேற்று ஃபேஸ்புக்­கில் பதி­விட்­ட­னர்.

ஆனால் 2021 டிசம்­ப­ரி­லி­ருந்து கட்­சிப் பணி­களை நிறுத்தி­விட்­ட­தா­க அதில் இரு­வ­ரும் குறிப்­பிட்­ட­னர். கடந்த 11 மாதங்­க­ளா­கப் பெய­ர­ள­வில் மட்­டுமே பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­னர்­க­ளாக இருந்­துள்­ள­தா­க­வும் கட்­சிக்­குப் பெரி­தும் பங்­க­ளிக்­க­வில்லை என்­றும் அவர்­கள் கூறி­னர்.

திரு­வாட்டி கானின் நடத்தை குறித்து கடந்த 2021 டிசம்­ப­ரில் நாடா­ளு­மன்ற உரி­மைக் குழு நடத்­திய விசா­ர­ணை­யில் திரு நாத­னும் திரு­வாட்டி லோவும் சாட்­சி­யம் அளித்­த­னர்.

பாலி­யல் வன்­மு­றைக்கு ஆளா­ன­தாக பொய் கூறி­யதை திரு­வாட்டி கான் கடந்­தாண்டு ஆகஸ்ட்­டில் ஒப்­புக்­கொண்­டார். 2021 நவம்­ப­ரில் அவர் பாட்­டா­ளிக் கட்­சி­யி­லி­ருந்து வில­கி­னார்.

அச்­சம்­ப­வத்­தின் தொடர்­பில் பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர்­கள் அளித்த சாட்­சி­யத்­தி­லி­ருந்து திரு நாதன், திரு­வாட்டி லோ இரு­வ­ரும் பல நேரங்­களில் முரண்­பட்­ட­னர்.

பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­ன­ராக 10 ஆண்­டு­க­ளாக இருந்த திரு­வாட்டி லோ, திரு­வாட்டி ரயீசா கானின் நிர்­வாக உத­வி­யா­ள­ராக பணி­யாற்­றி­னார். அதற்கு முன் அவர், திரு பிரித்­தம் சிங்­கின் உத­வி­யா­ள­ரா­க­வும் இருந்­துள்­ளார்.

திரு நாதன், 2013ஆம் ஆண்டு பாட்­டா­ளிக் கட்­சி­யில் தொண்­டூ­ழி­ய­ரா­கச் சேர்ந்­தார். 2016ஆம் ஆண்டு கட்­சி­யில் சேர்ந்த அவர், அதன் இளை­யர் பிரிவு மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும் உயர்­வு­பெற்­றார்.

கடந்த 11 மாதங்­கள் தங்­க­ளுக்கு எளி­தாக இருக்­க­வில்லை என்­றும் மாற்­றம் விரும்­பும் கட்­டத்தை அடைந்­த­தா­க­வும் இரு­வ­ரும் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­ட­னர்.

தங்­கள் விசு­வா­சம் கேள்­விக்கு உள்­ளா­கா­மல் சொந்­தக் கருத்­து­களை வெளிப்­ப­டுத்­தும் சுதந்­தி­ர­முள்ள சாதா­ரண­ரண குடி­மக்­க­ளாக மீண்­டும் ஆக விரும்பு­வ­தாக அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.