2 அரிய வகை சிங்கப்பூர்ப் பறவைகளுக்குப் பாதுகாப்பு

2 அரிய வகை சிங்கப்பூர்ப் பறவைகளுக்குப் பாதுகாப்பு

1 mins read
c011d501-5fd6-4192-afaa-5bd6d73de2cc
-

உலகின் மூன்றில் ஒரு பங்கு வரையிலான வைக்கோல் தலை புல் புல் பறவைகள் சிங்கப்பூர் காடுகளில் வசிக்கின்றன.

ஆனால் உலக அள­வில் ஆபத்தை எதிர்­நோக்­கும் அந்­தப் பாடும் பற­வை­கள், இப்­போது அழி­வின் விளிம்­பில் உள்­ளன.

அத­னால் அந்­தப் பற­வை­களுக்கு வலு­வா­கப் பாது­காப்பு வழங்­கப்­பட வேண்­டும் என்று பனா­மா­வில் நடை­பெ­ற­வுள்ள அழியக்கூடிய காட்டு விலங்­கு­கள், தாவ­ரங்­க­ளின் அனைத்­து­லக வர்த்­த­கம் குறித்த மாநாட்­டில் தேசி­ய பூங்­காக் கழ­கம் பரிந்­து­ரைக்­க­வுள்­ளது.

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று இதைத் தெரி­வித்­தார்.

வைக்­கோல் தலை புல் புல் பற­வை­களை அருகிவரும் உயி­ர் இன­மாக வகைப்­ப­டுத்த வேண்­டும் என்று சிங்­கப்­பூர், மலே­சியா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­கள் மாநாட்­டில் பரிந்­து­ரைக்­கும்.

பின்­னூட்­டம் ஒன்று எனும் இந்­தப் பட்­டி­ய­லில் வகைப்­ப­டுத்­தப்­படும் விலங்­கு­களும் தாவ­ரங்­களும் மிக­வும் அரிய நேரங்­களில் மட்­டுமே வாங்கி விற்­கப்­ப­ட­லாம்.