உலகின் மூன்றில் ஒரு பங்கு வரையிலான வைக்கோல் தலை புல் புல் பறவைகள் சிங்கப்பூர் காடுகளில் வசிக்கின்றன.
ஆனால் உலக அளவில் ஆபத்தை எதிர்நோக்கும் அந்தப் பாடும் பறவைகள், இப்போது அழிவின் விளிம்பில் உள்ளன.
அதனால் அந்தப் பறவைகளுக்கு வலுவாகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று பனாமாவில் நடைபெறவுள்ள அழியக்கூடிய காட்டு விலங்குகள், தாவரங்களின் அனைத்துலக வர்த்தகம் குறித்த மாநாட்டில் தேசிய பூங்காக் கழகம் பரிந்துரைக்கவுள்ளது.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று இதைத் தெரிவித்தார்.
வைக்கோல் தலை புல் புல் பறவைகளை அருகிவரும் உயிர் இனமாக வகைப்படுத்த வேண்டும் என்று சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் மாநாட்டில் பரிந்துரைக்கும்.
பின்னூட்டம் ஒன்று எனும் இந்தப் பட்டியலில் வகைப்படுத்தப்படும் விலங்குகளும் தாவரங்களும் மிகவும் அரிய நேரங்களில் மட்டுமே வாங்கி விற்கப்படலாம்.

