இதற்கிடையே, சென்ற மாதம் சீனா, சிங்கப்பூர் காவல் துறை அதிகாரிகளைப்போல ஆள்மாறாட்டம் செய்து $3.3 மில்லியன் மோசடி செய்யப்பட்டதாக காவல்துறை நேற்று கூறியது. 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் குறைந்தபட்சம் $700,000 இழந்துள்ளார் என்றும் அது நேற்று தனது அறிக்கையில் கூறியது.
இதுபோன்ற மோசடிகள் அதிகரிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புடன் நடந்துகொள்ளுமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

