சுகாதாரத்தை ஊக்குவித்த நிறுவனங்களுக்கு விருது

சுகாதாரத்தை ஊக்குவித்த நிறுவனங்களுக்கு விருது

2 mins read
553dfb23-cceb-47ec-aacd-a09cd4a4d823
-

ஆரோக்­கி­ய­மான வாழ்வை ஊக்­கு­விக்க பல்­வேறு புதிய வழி­மு­றை­க­ளை­யும் திட்­டங்­க­ளை­யும் அறி

­மு­கப்­ப­டுத்­திய சிறிய நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கும் பாலர் பள்­ளி­க­ளுக்­கும் சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் மொத்­தம் 135 விரு­து­களை அளித்­தி­ருந்­தது.

சுகா­தா­ரத்­தில் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் கருப்­பொ­ரு­ளைக் கொண்­டது இவ்­வாண்­டின் சிங்­கப்­பூர் ஆரோக்­கிய விருது உடலை கட்­டுக்­குள் வைப்­ப­தற்கு மட்­டு­மல்­லா­மல் மன­ந­லத்­தை­யும் ஊக்­கு­விக்­கும் திட்­டங்­க­ளைக் கொண்­டுள்ள நிறு­வ­னங்­களும் பள்­ளி­களும் இந்த விருது விழா­வில் முக்­கி­ய­மாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன. 58 வேலை­யி­டங்­கள், 75 பள்­ளி­கள், சமூ­கத்­தி­

லி­ருக்­கும் இரண்டு தனி­ந­பர்­க­ளுக்­கும் வெவ்­வேறு பிரி­வு­களில் விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

சுகா­தார மேம்­பாட்டு வாரிய அரங்­கத்­தில் நேற்­றுக் காலை நடை­பெற்ற விருது விழா­விற்கு தொடர்பு, தக­வல் மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சே­ரி­யும் தற்­காப்பு, மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­ம­து­வும் சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக வரு­கை­ய­ளித்­த­னர்.

பாலர் பள்­ளி­கள் கிரு­மிப் பர­வல் காலத்­தின் சவால்­க­ளுக்­கி­டையே பிள்­ளை­களை நன்கு பரா­ம­ரித்­த­தாக டாக்­டர் ஜனில் குறிப்­பிட்­டார்.

"முத­லா­ளி­க­ளின் மேற்­பார்­வை­யில், ஊழி­யர்­க­ளின் நாட்­பட்ட நோய்­களை தடுத்­தும் அவற்றை சமா­ளித்­தும் வேலை­யிட பாது­காப்பை மேம்­ப­டுத்­த­வும் முடி­யும். வேலை­

யி­டத்­தி­லும் வேலை­யி­லி­ருந்து ஓய்வு­ பெற்ற பின்­ன­ரும் வெளி­யில் அவர்­க­ளு­டைய ஆரோக்­கி­யத்­தில் பலன் காண­லாம்," என்­றார் திரு ஸாக்கி.

சிறிய நடுத்­தர நிறு­வ­னங்­கள் அறி­மு­கம் செய்­துள்ள பல்­வேறு புதிய திட்­டங்­கள், உழைப்­பா­ளி­கள் தங்­கள் சொந்த உடல்­ந­லத்­தி­லும் மன­ந­லத்­தி­லும் கூடு­தல் கவ­னம் செலுத்த ஊக்­கு­வித்­துள்­ளன.

அவ்­வாறு பயன்­பெற்­ற­வர்­க­ளுள் ஒரு­வ­ரான மச்­சிந்­தர் கோர், 57, தமது நிறு­வ­னத்­தின் சுகா­தார மேம்­பாட்­டுத் திட்­டங்­களில் 2020, 2021 ஆண்­டு­களில் பங்­கேற்று ஆரோக்­கிய வாழ்க்­கை­மு­றை­க­ளைக் கற்­றுக்­கொண்­டார்.