'அரிய நோய் சிகிச்சை உதவி; கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்'

'அரிய நோய் சிகிச்சை உதவி; கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்'

1 mins read
2668373a-074f-4ece-b44c-d800e1cfe90a
-

அரிய வகை நோய்­க­ளுக்­குச் செலவைப் பாரா­மல் மருத்­துவ சிகிச்­சைக்­கான ஆத­ரவை அரசாங் கம் அளிக்க வேண்­டுமா என்­பது பற்றி மிகக் கவ­ன­மா­கப் பரி­சீ­லிக்க வேண்­டும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தார்.

அத்­த­கைய சிகிச்­சை­க­ளின் ஆற்­றல் எந்த அள­வுக்கு இருக்­கும் என்­பது இன்­ன­மும் நிச்­ச­ய­மில்லை என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

அல்­ஜு­னிட் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் லியோன் பெரேரா நாடாளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்த கேள்­விக்கு நவம்­பர் 8ஆம் தேதி எழுத்து மூல­மாக அளித்த பதி­லில் அமைச்­சர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

அரிய நோய் உதவி நிதி மூலம் இப்­போது ஐந்து நோய்­க­ளுக்­கான ஏழு வகை மருந்­து­க­ளுக்கு ஆதரவு அளிக்­கிறது. இந்த நிதி­யு­த­வியைப் பெற 2021 ஏப்­ரல் முதல் ஆறு நோயா­ளி­கள் விண்­ணப்­பித்து இருந்­த­னர். அவர்­கள் அனை­வ­ருக்­கும் இந்த நிதி உத­வு­கிறது.

அந்த நோயா­ளி­க­ளுக்கு ஆதரவு அளிக்க போது­மான அள­வுக்கு நிதி­யில் பணம் இருக்­கிறது என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.