சிங்கப்பூரில் கடைத்தொகுதி ஒன்றில் அமைந்திருக்கும் முதலாவது சமூக மன்றமான நீ சூன் சென்ட்ரல் சமூக மன்றம் நேற்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
ஈசூனில் உள்ள நார்த் பாயிண்ட் சிட்டி கடைத்தொகுதியில் அமைந்திருக்கும் அந்த மன்றம், குடியிருப்பாளர்களுக்கு மிகவும் வசதியாக 200க்கும் மேற்பட்ட அரசாங்கச் சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் முதலாவது முன்னோடிச் சேவை மையமாகவும் திகழ்கிறது.
திறப்பு விழாவில் கலந்துகொண்ட துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், கடைத்தொகுதியுடன் சமூக மன்றத்தை இணைப்பதால் மக்களுக்கு அது மாபெரும் வசதியாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
கொவிட்-19 காரணமாக இரண்டாண்டுகளுக்கும் அதிக காலம் தாமதமாக இந்த மன்றம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டு உள்ளது.
இந்தச் சமூக மன்றம் ஈசூன் ஸ்திரீட் 72ல் உள்ள புளோக் 749ல் முன்பு செயல்பட்டது. இப்போதைய புதிய மன்றம் 6 மடங்கு பெரியது.

