செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
da308326-dca0-4fc7-be05-c35b3d7ee1c4
-

ஆடவர் மீது கொள்ளைக் குற்றச்சாட்டு

சவரக் கத்தியைக் கொண்டு 64 வயது மாதிடம் கொள்ளையடிக்க முயன்றதாக ஷாம்ஷர் சிங் என்ற 24 வயது ஆடவர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.

மவுண்ட் பேட்டன் ரோட்டில் இருக்கும் மேம்பாலத்தில் வியாழக்கிழமை இரவு சுமார் 8.30 மணிக்கு அந்த மாதைத் தாக்கி அவரிடம் கொள்ளை அடிக்க சிங் முயன்று இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தாக்கப்பட்ட மாது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பணம் இழப்பு இல்லை என்றும் அந்த மாதின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்தது.

அணுமின்சக்தி மீது நாட்டம்

சிங்­கப்­பூரைப் பொறுத்­த­வரை அணு­மின்சக்தி என்­பது சாத்­தி­ய­மற்ற ஒன்று என்று பத்து ஆண்டுகளுக்கு முன் கரு­தப்­பட்­டது. ஆனால் இப்­போது நில­வ­ரங்­கள் பெரி­தும் மாறி இருக்­கின்­றன. கரி­மக்­க­ழிவை அகற்ற உலக அள­வில் முயற்­சி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

அதே­நே­ரத்­தில், அண்­மைய காலத்­தில் தொழில்­நுட்ப நவீ­னங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இவை கார­ண­மாக, சிங்­கப்­பூர் இப்­போது அணுமின்­சக்தி பக்கம் தன் பார்­வை­யைத் திருப்பி இருக்கிறது.

பாது­காப்பு அம்­சங்­களில் பல்­வேறு மேம்­பா­டு­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. முன்­பை­விட சிறந்த பாதுகாப்பு அம்சங்­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

இவை, நிலப்­பற்­றாக்­குறை உள்ள சிங்­கப்­பூ­ருக்கு அணு மின்­சக்தியை சாத்­­தி­ய­மான ஒன்­றாக ஆக்கி இருக்­கின்­றன. இதைப் பொறுத்­த­வரை 1950களில் இருந்தே தொழில்­நுட்­பங்­க­ளை சிங்­கப்­பூர் கண்­கா­ணித்து வந்­துள்­ளது என்பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஆடவர் மீது தாக்குதல்: கைது

கேலாங்கில் லோரோங் 22ல் அல்ஜுனிட் ரோடு பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 6.30 மணிக்கு 26 வயது ஆடவர் ஒருவர் கத்தரிக்கோலால் 30 வயது ஆடவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமென்றே தாக்கி இருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த ஆடவர் கைதாகி இருப்பதாக காவல்துறை தெரிவித்தது.

தாக்கப்பட்ட ஆடவர் உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் அந்த 26 வயது ஆடவர் மீது சனிக்கிழமை குற்றம் சுமத்தப்பட இருந்ததாகவும் அது குறிப்பிட்டது.